06 ஏப்ரல் 2011

ஸ்ரீலங்கா கடற்படையினரின் சடலங்கள் கரையொதுங்கின.

கடந்த வாரம் முல்லைத்தீவு கடலில் காணாமல்போன சிறீலங்கா கடற்படையினரின் சடலங்களை வடமராட்சி கிழக்கு கடற்கரைப்பகுதியில் கண்டதாக வடமராட்சி பகுதி மீனவர்கள் இன்று (06) தெரிவித்துள்ளனர். ஆறு தினங்களுக்கு முன்னர் சிறீலங்கா கடற்படையினர் நால்வர் காணாமல்போனதுடன், அவர்களின் படகும் ஆயுதங்களும் உடுத்துறைப் பகுதியில் கரையொதிங்கியிருந்தன. அதேசமயம், தமிழக மீனவர்கள் நால்வர் காணாமல்போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கடந்த 48 மணிநேரத்தில் யாழ் குடாநாட்டில் இரு சடலங்கள் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கரையொதிங்கிய ஆண்களின் சடலங்களில் உடைகள் காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. ஒரு சடலம் மாதகல் பகுதியிலும், மற்றைய சடலம் புங்குடுதீவு கடற்கரைப்பகுதியிலும் ஒதுங்கியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக