23 ஏப்ரல் 2011

மகிந்தவின் பெயர் நீக்கத்தால் துன்பப்படுகிறது ஜாதிக ஹெல உறுமய!

உலகின் செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலிலிருந்து ஜனாதிபதியின் பெயர் நீக்கப்பட்டமை தொடர்பில் டைம்ஸ் சஞ்சிகையின் ஆசிரியர் குழாம் விளக்கமளிக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய கட்சி வலியுறுத்தியுள்ளது.
இணைய கருத்துக் கணிப்பின் அடிப்படையில் முதல் பத்து நிலைகளில் இடம்பிடித்திருந்த மஹிந்த ராஜபக்ஷவின் பெயர் இறுதி நேரத்தில் நீக்கப்பட்டது.
இந்த நடவடிக்கையின் பின்னணியில் சூழ்ச்சி இருக்கலாம் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் ஊடகப் பேச்சாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
இணைய கருத்துக் கணிப்பின் போது ஜனாதிபதி நான்காம் நிலையில் காணப்பட்டதாகவும், இதனையிட்டு இலங்கையர்கள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
என்ன காரணத்திற்காக ஜனாதிபதியின் பெயர் நீக்கப்பட்டது என்பது தொடர்பில் டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் குழாம் விளக்கமளிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
சில மேற்குலக நாடுகளும், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களும் ஜனாதிபதியின் பெயர் நீக்கப்பட்டமையின் பின்னணியில் செயற்பட்டிருக்கலாம் என அவர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக