25 ஏப்ரல் 2011

மொகான் பீரிசை தடுமாறவைத்த அமெரிக்க தூதர்!

ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு சமர்பித்துள்ள அறிக்கை தொடர்பில் கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதுவர்களுக்கு சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் நடத்திய விளக்கமளிக்கும் கூட்டத்தில் கலந்துகொண்ட சிறீலங்கா நீதி ஆணையாளர் நாயகம் மோஹான் பீரீஸ் இற்கும் கொழும்புக்கான அமெரிக்க தூதுவர் பற்றீசியா பூற்றனீசிற்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் நடைபெற்றதாக கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.
கடந்த வியாழக்கிழமை (22) நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட மோஹான் பீரீஸ் ஐ.நாவின் பரிந்துரைகள் தொடர்பில் சிறீலங்கா அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவே விசாரணைகளை மேற்கொள்ளும் என தெரிவித்திருந்தார்.
அவரின் இந்த கருத்தால் விசனமடைந்த அமெரிக்கத் தூதுவர் சரமாரியாக பல கேள்விகளை தொடுத்ததால் நிலை தடுமாறிய பீரீஸ் ஒரு அடி நகர்ந்துபோய் மலைத்து நின்றதாக கூட்டத்தில் பங்குபற்றியவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் தன்னை சுதாகரித்துக்கொண்ட பீரீஸ், நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாட்டில் சிறீலங்கா அரசு தலையிடாது என தெரிவித்திருந்தார். ஆனால் இந்த உறுதிமொழிகளை சிறீலங்கா அரசு காப்பாற்றுமா? என்பது தான் முதன்மையான கேள்வியாக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக