
கடந்த வியாழக்கிழமை (22) நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட மோஹான் பீரீஸ் ஐ.நாவின் பரிந்துரைகள் தொடர்பில் சிறீலங்கா அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவே விசாரணைகளை மேற்கொள்ளும் என தெரிவித்திருந்தார்.
அவரின் இந்த கருத்தால் விசனமடைந்த அமெரிக்கத் தூதுவர் சரமாரியாக பல கேள்விகளை தொடுத்ததால் நிலை தடுமாறிய பீரீஸ் ஒரு அடி நகர்ந்துபோய் மலைத்து நின்றதாக கூட்டத்தில் பங்குபற்றியவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் தன்னை சுதாகரித்துக்கொண்ட பீரீஸ், நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாட்டில் சிறீலங்கா அரசு தலையிடாது என தெரிவித்திருந்தார். ஆனால் இந்த உறுதிமொழிகளை சிறீலங்கா அரசு காப்பாற்றுமா? என்பது தான் முதன்மையான கேள்வியாக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக