12 ஏப்ரல் 2011

தமிழ் விவசாயிகளை விரட்டிய சிங்களத்துறவி!

திருமலை மாவட்டத்தில் உள்ள படுகாடு பகுதியில் நெல் பயிர்ச்செய்கையில் ஈடுபட்ட தமிழ் விவசாயிகள் மீது பௌத்ததுறவி தலைமையிலான சிங்கள காடையர்கள் அச்சுறுத்தல்களை மேற்கொண்டு,அவர்களை அங்கிருந்து விரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 1963 ஆம் ஆண்டில் இருந்து அந்த பகுதியில் தாம் நெற்செய்கையில் ஈடுபட்டுவருவதாக தமிழ் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அடுத்த நெற்செய்கைக்கு தமிழ் விவசாயிகள் தமது நிலங்களை தயார் செய்துகொண்டிருக்கையில் அங்கு நுளைந்த சிங்கள கடையர்களும், பௌத்த துறவியும், தமிழர்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு அச்சுறுத்தியுள்ளனர். வெளியேறமறுத்தால் படுகொலைசெய்யப்படுவீர்கள் எனவும் தமிழ் விவசாயிகளை அவர்கள் எச்சரித்துள்ளனர். இது தொடர்பில் சேருவல சிறீலங்கா காவல்நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டபோதும், அவர்கள் நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக