24 ஏப்ரல் 2011

இந்தியாவிடம் அறிக்கையை கையளித்தது ஸ்ரீலங்கா!

ஐக்கிய நாடுகள் சபை அமைத்துள்ள போர்க்குற்ற ஆலோசனைக்குழுவின் அறிக்கையை வாசித்து அதில் இருந்து தம்மை காப்பாற்றுமாறு சிறீலங்கா அரசு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதுடன் அறிக்கையையும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறீலங்கா அரசினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையை ஆய்வு செய்வதற்கு இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தலைமையில் குழு ஒன்றை இந்தியா அமைத்துள்ளதாக இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன்னர் மன்மோகன் சிங்குடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட மகிந்தா அறிக்கை தொடர்பில் கலந்துரையாடியதுடன், அதனை இந்திய அரசுக்கு அனுப்பியும் வைத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக