08 ஆகஸ்ட் 2013

புலிகள் அமைப்புடன் தொடர்புகளை வைத்திருந்த 05 பேர் தேர்தலில்!

விடுலைப்புலிகள் அமைப்புடன் நேரடியான தொடர்புகளை வைத்திருந்த 05 பேர் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதாக தெரியவந்துள்ளது என திவயின தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்வாதி ஒருவரே இவர்களை மீண்டும் அரசியல் அரங்கிற்கு கொண்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த அரசியல்வாதி புலிகளின் யாழ்ப்பாண கட்டளை தளபதியான தீபனின் நெருங்கிய உறவினர் எனவும் திவயின கூறியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் ஆனந்தி என்ற பெண், புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் எழிலனின் மனைவி எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக