
இந்த பகுதியில் விடுதலைப்புலிகளின் நினைவிடம் ஒன்று இருந்ததுடன் போருக்கு பின்னர் அதனை இராணுவத்தினர் முற்றாக சேதப்படுத்தியிருந்தனர். இந்த நிலையில் வல்வை நகர சபைக்கு சொந்தமான பூங்காவை புனரமைத்து, நகர சபை மக்களின் பாவனைக்கு வழங்கியிருந்தது.
இதற்கு முன்னர் நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்திருந்த இராணுவத்தினர் குறித்த பூங்கா தமக்குரியது எனவும் அதனை தமக்கு வழங்குமாறு கோரியிருந்தனர். அதனை நீதிமன்றம் நிராகரித்த நிலையில் மேற்படி பூங்கா நேற்று முன்தினம் இனந்தெரியாதவர்களினால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக