20 ஆகஸ்ட் 2013

மானிப்பாயில் வேட்பாளர் மீது தாக்குதல்!

வடமாகாண சபை வேட்பாளர் ஒருவரின் வீட்டிற்குள் இன்தெரியாத நபர்கள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளமை தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கைப் பொலிஸார் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளனர். புதிய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் சேனாதிராஜா கிருஸ்ணகுமார் என்பவர் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மானிப்பாய் பகுதியில் அமைந்துள்ள இவரது வீட்டிற்கு நேற்று திங்கட்கிழமை இரவு சென்ற சிலர் அவர் மீது தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்றதாக் தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதலின்போது அவர் சிறிய காயங்களுக்கு உள்ளானதாகவும் மேலும் தெரியவருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக