23 ஆகஸ்ட் 2013

இலங்கை மீது திருப்தியில்லை-சல்மான் குர்ஷித்

இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கு அச்சாணியாக இருக்கும், அவர்களின் பாதுகாப்பை ஓரளவேனும் உறுதி செய்யும் அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் இலங்கை அரசின் நடவடிக்கை திருப்திகரமாக இல்லை'' என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் நேற்று தெரிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையில் நேற்றுக் காலை பா.ஜ.க. உறுப்பினர் ரவிசங்கர் பிரசாத் எழுப்பிய கேள்வியயான்றுக்கு பதிலளித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நாடாளுமன்ற மேலவை அமர்வின்போது, "இலங்கையில் தமிழர்கள் பாதுகாப்பாக வாழ 13 ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த இந்தியா வலியுறுத்துமா என்று பா.ஜ.க. உறுப்பினர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், "13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த இலங்கை அரசு எடுத்த நடவடிக்கை திருப்திகரமாக இல்லை. 13 ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தி தமிழர்கள் உட்பட இலங்கையில் வாழும் அனைத்து மக்களினதும் பாதுகாப்பான வாழ்வை உறுதிப்படுத்த வேண்டுமென்று இலங்கையை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது'' என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக