21 ஆகஸ்ட் 2013

இப்படியும் ஒரு கணவன்!

களுத்துறை பன்வில பிரதேசத்தில் இயங்கி வந்த விடுதியொன்றில் பாலியல் தொழில் நடப்பதாக களுத்துறை தெற்கு காவற்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து, அங்கு சுற்றுவளைப்பை மேற்கொண்ட காவற்துறையினர் பாலுறவுக்காக பெண்களை நாடிச் சென்றவர்கள் போல் சென்று அங்கிருந்த தரகர் ஒருவரை கைதுசெய்துள்ளனர்.
அத்துடன் அங்கிருந்த பெண்ணொருவரையும் காவற்துறையினர் கைதுசெய்துள்ளனர். ஏனைய பெண்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். கைதுசெய்யப்பட்ட பெண் கண்டியை சேர்ந்தவர் எனவும் அவரை அவரது கணவரே பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வாகனம் ஒன்றுக்கு தவணைப் பணத்தை செலுத்துவதற்காக பெண்ணின் கணவர், பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக