09 ஆகஸ்ட் 2013

விமானப்படையை நவநீதம்பிள்ளை நம்பவில்லையென ரம்புக்கல கவலை!

இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு இலங்கை விமானப்படையின் விமானங்கள் மீது நம்பிக்கை இல்லையாம். இனி நாம் என்ன செய்வது? அப்படியானால் ஐ.நா. விமானத்திலேயே வர வேண்டும் என அமைச்சரவை பேச்சாளரும் ஊடக அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். நவநீதம்பிள்ளை ஐ.நா. விமானத்திலேயே வந்து வடக்கு உட்பட தேவையான அனைத்து இடங்களுக்கும் சென்று எதிர்பார்க்கும் உண்மைகளை கண்டறிய அரசாங்கம் இடமளிக்கும். உலகத்தில் வேறு எந்தவொரு நாட்டிலும் மோதல் சம்பவங்கள் இடம்பெறுவதில்லையா? வெலிவேரியவில் ஒரு சம்பவம் நடந்து முடிந்துவிட்டது. இதனை மீண்டும் தூண்டி அரசியலாக்க எதிர்க்கட்சிகள் முற்படுவது நியாயமில்லை என ரம்புக்கல தெரிவித்துள்ளதுடன்,பொதுநலவாய மாநாட்டை பாதிக்கும் அல்லது ஐ.நா. மனித உரிமை பேரவையின் இலங்கைக்கு எதிராக மேலும் நெருக்கடிகள் வலுவடையும் என்பதெல்லாம் உள்நோக்கங்களைக் கொண்ட பிரசாரங்கள் எனவும் ரம்புக்கல குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக