17 ஆகஸ்ட் 2013

மாணவர் படுகொலை ஐ..நா.மனித உரிமைகள் சபைக்கு!

திருகோணமலை மாணவர் படுகொலைச் சம்பவம் தொடர்பில் ஐ.நா.மனித உரிமைகள் சபையில் முறைப்பாடு செய்யப்பட உள்ளது.2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஐந்து மாணவர்கள் திருகோணமலை கடற்கரையில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டனர்.இந்த சம்பவத்தில் உயிரிழந்த ரஜிகர் மனோகரன் என்ற மாணவரின் தந்தை மருத்துவர் காசிப்பிள்ளை மனோகரன் இது தொடர்பில் ஐ.நா.மனித உரிமைகள் சபையில் மனுவொன்றை தாக்கல் செய்ய உள்ளார்.எதிர் வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் சபையின் அமர்வின் போது இந்த மனு தாக்கல் செய்யப்பட உள்ளது.படுகொலைச் சம்பவங்கள் தொடர்பில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக் குழுவின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் எனக் கோரி, மனோகரன் மனித உரிமைகள் சபையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்ய உள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் ஆணைக்குழுவுக்கு தாம் சாட் சியமளித்துள்ளதாகவும், இத னால் விசாரணை அறிக்கை தொடர்பில் அறிந்து கொள்ளும் உரிமை தமக்கு இருப்ப தாகவும் மருத்துவர் மனோகரன் தெரிவித்துள்ளார். உண்மையான கொலையாளிகளையும் என்ன நேர்ந்தது என்பதனையும் இந்த அறிக் கையின் மூலம் புரிந்து கொள்ள முடியும் எனக் கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச் சாட்டின் பேரில் 12 விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக