08 ஆகஸ்ட் 2013

காணிகள் சுவீகரிப்புக்கு எதிராக சம்பந்தன் உரை!

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் காணிகள் இராணுவத்தினரால் அபகரிக்கப்படுவதைக் கண்டித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று நாடாளுமன்றில் குரல் கொடுக்கவுள்ளது. காணி அபகரிப்புத் தொடர்பில் நாடாளுமன்றில் கூட்டமைப்பு சமர்ப்பித்த பிரேரணை இன்று மாலை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்போது இதுதொடர்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் இரா.சம்பந்தன் முதலில் உரையாற்றவுள்ளார். அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சியினரும் ஆளுந்தரப்பினரும் தங்கள் வாதங்களை முன்வைக்கவுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக