14 டிசம்பர் 2014
27 நவம்பர் 2014
படைகளின் முற்றுகைக்கு மத்தியிலும் யாழ்.பல்கலையில் மாவீரர் சுடர்!
அச்சுறுத்தல்கள் அனைத்தையும் தாண்டி யாழ்.பல்கலைக்கழகத்தில் மாவீரர்நாள் அனுஸ்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் பல்கலை வளாகத்தில் அமைந்துள்ள நினைவுத் தூபிக்கு முன்னால் மாணவர்களால் சுடர் ஏற்றப்படலாம் என்று படையினரும்,பொலிஸாரும் காத்திருந்த வேளை பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாணவர் பொது அறையில் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்.பல்கலைக்கழக சூழலில் இராணுவம் ,பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டு பதட்டம் நிலவுகின்ற நிலையிலும் மண்ணுக்காக உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இதேவேளை மாலை பல்கலைக்கழக வளாகத்திற்கு வரும் மாணவர்கள்,உத்தியோகத்தர்களை சோதனை செய்த பின்னரே பல்கலைக்கழகத்திற்கு செல்ல அனுமதித்து வருகின்ற நிலையில். பத்துக்கு அதிகமான மாணவர்கள் இன்று மாலை பல்கலைக்கழகத்திற்குள் புகுந்து மாவீரர் சுடரை ஏற்றிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பல்கலைக்கழகத்திலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
22 நவம்பர் 2014
பதற்றத்தில் மகிந்த கட்சியினர்!
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கட்சிதாவலை ஊக்குவிக்கிறார் என குற்றஞ்சாட்டியுள்ள அரசாங்கம் நாட்டை ஸ்திரத்தன்மை இழக்க செய்வதற்கான பெரும் நாடகமொன்றின் ஒரு பகுதியாகவே இது இடம்பெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த. சந்திரிகா குமாரதுங்கவின் நாடகத்தில் மைத்திரிபால சிறிசேன முக்கிய கதாபாத்திரத்தை வகிக்கிறார் எனவும் குற்றம்சாட்டியுள்ளார். இதேவேளை இந்த முழு நாடகமும் மேற்குலக சதி என குறிப்பிட்டுள்ள அமைச்சர் டலஸ் அழகபெரும, இலங்கையின் உள்விவகாரங்களில் இராஜதந்திரிகளை தலையிடவேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார். விடுதலைப் புலிகள் சார்பு புலம்பெயர் தமிழர் அமைப்புகளும் சில நாடுகளும் நாட்டை ஸ்திரத்தன்மை இழக்க செய்வதற்காக நிதிவழங்குகின்றன எனவும் குற்றம்சாட்டியுள்ள அவர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகப் போட்டியிடுவது என்ற மைத்திரிபாலவின் முடிவு குறித்து தான் ஏமாற்றமடைந்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்,பல்கலை மாணவனைக் காணவில்லை!

அதன் பின்னர் வீட்டிற்குள் நுழைந்த புலனாய்வாளர்கள் வீட்டிலிருந்தவர்களிடம் நிவாஸ் தொடர்பில் தீவிரமாக விசாரணை நடத்தியிருக்கின்றனர். சம்பவத்தினை அடுத்து புலனாய்வாளர்கள் வீட்டைவிட்டு வெளியேறிய போதிலும் இதுவரையில் நிவாஸின் தொடர்பு வீட்டாருக்கு கிடைக்கவில்லை என்று தெரியவருகிறது. அவருடைய தொலைபேசியும் செயற்பாட்டில் இல்லை என்றும் அவருடைய உறவுகள் கவலை வெளியிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
21 நவம்பர் 2014
மஹிந்த - மைத்திரி அவசர சந்திப்பு!

16 நவம்பர் 2014
நகுலேஸ்வரன் கொலை தொடர்பில் நீதியான விசாரணை தேவை!
.jpg)
நகுலேஸ்வரனின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் நால்வரை கைது செய்துள்ளதாகவும், படுகொலைக்கு பயன்படுத்திய ரி-56 வகை துப்பாக்கியை கண்டெடுத்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் நீதி நியாயமாக விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றத்துடன் தொடர்புடைய அனைவரும் பொதுமக்களுக்கு அடையாளப்படுத்தப்படல் வேண்டும். அவர்கள் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டு அவர்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படல் வேண்டும்.
ஏனெனில் யுத்தம் முடிவடைந்து ஐந்தரை வருடங்களை கடந்து பயணித்துக் கொண்டிருக்கும் சாதாரண நிலையில், புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளில் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு அவர் உயிரிழந்திருக்கும் முதலாவது சம்பவம் இதுவாகும். இச்சம்பவம் தொடர்பில், விடுவிக்கப்பட்டுள்ள போராளிகள் அனைவரும் தத்தமது எதிர்காலம் தொடர்பில் அச்சமும் கவலையும் கொண்டுள்ளனர். வடக்கு முழுவதும் இச்சம்பவத்தால் ஒருவித பதட்டம் மேலோங்கி காணப்படுகின்றது.
எனவே பொதுமக்களின் அமைதியை, இயல்பு வாழ்க்கையை குழப்பியுள்ள துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தையும் படுகொலையையும் வன்மையாக கண்டிப்பதோடு, நகுலேஸ்வரனின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அநுதாபங்களையும், ஆறுதல்களையும் தெரிவிப்பதாகவும், சட்டம் ஒழுங்கைப்பேணி பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதியை பெற்றுக்கொடுக்க அரசு முனைய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
15 நவம்பர் 2014
தீவகத்தின் சமகால நிலமைகள் குறித்து விந்தனுடன் தீவக பிரதிநிதிகள் சந்திப்பு!

கடந்த 13.11.14 அன்று புலம்பெயர்ந்து வாழும் நெடுந்தீவைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் வர்த்தகருமான செல்வரட்ணம் சுரேஸ் என்பவரின் ஏற்பாட்டில் சிரேஸ்ட்ட ஊடகவியலாளர் சுப்ரமணியம் மகாலிங்கசிவத்தின் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
தீவகத்தின் அனைத்து பகுதிகளையும் சேர்ந்த புலம்பெயர் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் தீவகத்தின் அபிவிருத்தி குறித்து முக்கிய விடயங்கள் பேசப்பட்டதாக ஏற்பாட்டாளர் சுரேஸ் செல்வரட்ணம் தெரிவித்தார்.
13 நவம்பர் 2014
கட்டளை பிறப்பித்தவர்களே தண்டிக்கப்படுவர்-அமெரிக்கா

09 நவம்பர் 2014
‘பிரபாகரன் மாலைப் பொழுது’

கிறித்து பிறப்பிற்கு முந்திய நாளான 24ம் திகதி கிறிஸ்மஸ் மாலை என உலகெங்கும் உள்ள கிறித்தவர்கள் கொண்டாடிவருவது போன்று தமிழீழத் தேசியத் தலைவரின் 60வது பிறந்த நாளான 26ம் திகதிக்கு முந்தைய நாளான 25ம் திகதி ‘பிரபாகரன் மாலைப் பொழுது’ என்று கடைப்பிடிக்கும் விதமாக இந்த கவியரங்கு நடைபெற உள்ளது.
07 நவம்பர் 2014
சிறீலங்காவை கண்டிக்கிறார் ஐ.நா.மனித உரிமை ஆணையாளர்!

06 நவம்பர் 2014
சிறீலங்காவிற்கு அமெரிக்கா எச்சரிக்கை!

03 நவம்பர் 2014
தமிழகத்தில் காங்கிரஸ் உடைந்தது!

01 நவம்பர் 2014
வைகோ திமுகவுடன் சேரக் கூடாது!

இவ்வாறு தமிழருவி மணியன் கூறினார்.
29 அக்டோபர் 2014
வைகோவும் ஸ்டாலினும் சந்திப்பு!கூட்டணிக்கான காய் நகர்த்தலா?
.jpg)
சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த வைகோ, இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டோம். அரசியல் நாகரீகம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமான அமைந்த சந்திப்பு. அன்பு சகோதரர் ஸ்டாலினை சந்தித்தது மகிழ்ச்சி. திமுக தலைவர் கலைஞரின் உடல்நலம் குறித்து விசாரித்தேன். ஸ்டாலின் உடனான சந்திப்பின்போது சட்டமன்ற தேர்தல் குறித்து பேசவில்லை.கூட்டணி அமைக்க வேண்டும் என்று ஸ்டாலின் விரும்பினால் மகிழ்ச்சி என்றார்.
27 அக்டோபர் 2014
குர்திஸ் பெண் வீராங்கனையின் தலையை துண்டித்த ஐஎஸ்ஐஎஸ்!
குர்திஷ் படையில் இணைந்து, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக தீரத்துடன் போரிட்டு வந்த பெண் வீராங்கனை ரெஹேனா என்பவரை உயிருடன் பிடித்து தலையைத் துண்டித்து கொடூரமாக கொலை செய்துள்ளனர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள். இவரது மரணச் செய்தி இதுவரை உறுதி செய்யப்படவில்லை. ஆனால் பல்வேறு இணையதளங்களிலும் இந்த மரணச் செய்தி காட்டுத் தீயாக பரவி வருகிறது. குர்திஷ் படையில் இருந்தபோது நூற்றுக்கணக்கான ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை கொன்று குவித்தவர் ரெஹேனா என்பது குறிப்பிடத்தக்கது.குர்திஷ் படையின் வீரத்திற்கு அடையாளமாக பார்க்கப்பட்டவர் இந்த ரெஹேனா. மிகுந்த துணிச்சலுடன் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் தன்னை இணைத்துக் கொண்டவர்.ரெஹேனா என்பது இவரது உண்மையான பெயர் அல்ல. புணை பெயர்தான். சிரிய எல்லையில் இவர் தீவிரமான போரில் ஈடுபட்டிருந்தார்.இவர் தனிப்பட்ட முறையில் 100 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்ற பெருமைக்குரியவர் ஆவார்.இவர் வெற்றிக்கான இலச்சினையான வி என்று இரட்டை விரலை காட்டும் படம் ஒன்றை பத்திரிகையாளர் ஒருவர் டிவிட்டரில் போட்டு விட உலகம் முழுவதும் பிரபலமானார் ரெஹேனா.இந்த டிவிட் 5000 முறை ரீட்வீட் செய்யப்பட்டது. ஆனால் அந்த தீரம் மிகுந்த பெண் தற்போது உயிருடன் இல்லை என்று செய்திகள் வருகின்றன.ரெஹேனா, குர்திஷ் ராணுவத்தின் பெண்கள் பிரிவில் இடம் பெற்றிருந்தவர் ஆவார்.தற்போது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இவரைக் கொன்று தலையைத் துண்டித்து துண்டித்த தலையுடன் போஸ் கொடுப்பது போன்ற படங்கள் உலா வருகின்றன. இது அதிர்ச்சி தருவதாக உள்ளது.சிரியாவில் உள்ள கொபேன் நகரில்தான் போரில் ஈடுபட்டிருந்தார் ரெஹேனா. இந்த கொபேன் நகரமானது 3 பக்கங்கங்களில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் வசம் உள்ளது. இன்னொரு பகுதியை குர்திஷ் படையினர் தங்கள் வசம் வைத்திருந்து போரிட்டு வருகின்றனர். இவர்களுக்கு அமெரிக்க விமானப்படை அவ்வப்போது தாக்குதல் நடத்தி ஆதரவு தந்து வருகிறது.கடந்த ஒரு மாதமாக இந்த கொபேன் நகரில் தீவிரவாதிகள் உக்கிரமாக தாக்கி வருகின்றனர். ஆனால் குர்திஷ் படையினர், அமெரிக்கப் படையினரின் உதவியுடன் அதை முறியடித்து சமாளித்துக் கொண்டிருக்கின்றனர்.குர்திஷ் படையின் மகளிர் பிரிவில் ஆயிரக்கணக்கான பெண்களும் இடம் பெற்றுள்ளனர். ஆண்களுக்கு நிகராக இவர்களும் கலக்கி வருகின்றனர்.
26 அக்டோபர் 2014
புலிகள் மீதான தடை நீக்கம் குறித்து பிரிட்டன் ஆராய்கிறதாம்!

2000 ஆம் ஆண்டின் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழேயே பிரிட்டனில் அநத அமைப்பு தடைசெய்யப்பட்டுள்ளது.இது ஐரோப்பிய ஒன்றிய ஏற்பாடுகளிலிருந்து வித்தியாசமானது. அதேவேளை இந்த தீர்ப்பு உறுப்பு நாடுகளால் மேற்கொள்ளப்பட்ட அரசியல் ரீதியிலான ஒன்றல்ல என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.எனினும் நடைமுறை விதிகளின் அடிப்படையில் சட்ட ரீதியாக புலிகளுக்கு எதிரான தடை நீக்கம் பற்றிய தீர்ப்பு இது என்பதும் முக்கியமானது.
அந்த வகையில் பிரிட்டனும் ஏனைய உறுப்புநாடுகள் போன்று குறிப்பிட்ட தீர்ப்பு மற்றும் பொருத்தமான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராய்ந்து வருகிறது.இவேளை அடுத்த மூன்று மாத காலத்திற்க்கு விடுதலைப்புலிகளின் சொத்துக்கள் முடக்கம் நீடிக்கும் என இலங்கைக்கான பிரிட்டனின் தூதரக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
24 அக்டோபர் 2014
படுகொலைகளை நினைவூட்டுகிறது ராஜபக்ஷவின் 4இலட்சம் லைக்!

23 அக்டோபர் 2014
இலங்கை தொடர்பிலும் ஐ.நா.பொதுச்சபைக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது!
ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக்கு சமர்ப்பித்துள்ள தனது அறிக்கையொன்றில் ஐ.நாவின் மனித உரிமை ஆணையாளர் சயிட் அல்ஹுசைன் இலங்கை குறித்தும் குறிப்பிட்டுள்ளார் தன்னுடைய அலுவலகம் முன்னைய ஆணையாளரின் கீழ் கடந்த ஒரு வருட காலப் பகுதியில் மேற்கொண்ட செயற்பாடுகள் குறித்து சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பிட்ட காலப் பகுதியில் ஆணைக்குழு மூன்று நாடுகள் குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. சிரியா, மத்திய ஆபிரிக்க குடியரசு, இலங்கை ஆகியனவே இந்த நாடுகள். இலங்கை உள்ளிட்ட மூன்று நாடுகள் தொடர்பில் மூன்று விசேட குழுக்கள் ஊடாக விசாரணைகளை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் பலஸ்தீனம், எரித்திரியா மற்றும் ஈராக் குறித்தும் விசாரணைகள் இடம்பெறலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த மாதம் நான் பதவியேற்றபோது, பெரும் நிதிப்பற்றாக்குறைக்கு மத்தியிலும் எனது அலுவலகம் முன்னெடுத்துள்ள பணிகளை பார்த்து நான் ஆச்சரியமடைந்தேன். ஐ.நாவின் முக்கிய தூண்களில் ஒன்றான மனித உரிமைக்கு தற்போது மிக குறைந்தளவு வளங்களே கிடைக்கின்றன. ஏனைய துறைகளுக்கு வழங்கப்படுவதை விட குறைவாகவே மனித உரிமைகளுக்கு வழங்கப்படுகின்றது. இது தொடரமுடியாது. மனித உரிமைகள் மீறப்படும்போது துஷ்பிரயோகங்களும், மீறல்களும் பாரிய மோதல்களை உருவாக்கும் போது, சகலவகைகளிலும் இழப்புகள் மிகப் பெரிதாகக் காணப்படுகின்றன. இவ்வாறு தெரிவித்துள்ள அவர், மனித உரிமை மீறல்களை கண்டுபிடித்து எச்சரிப்பதற்கான தனது அமைப்பின் திறனை அதிகரிக்குமாறும், ஆபத்தான சமிக்ஞைகள் வெளியானவுடன் உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறும் கோரியுள்ளார்.
22 அக்டோபர் 2014
யாழில்.மக்களை துரத்தி துரத்தி வாழ்த்துகிறது படை!

யாழ் பாதுகாப்பு படைகளின் கட்டளைத்தளபதி மற்றும் இராணுவத்தினரின் தீபாவளி வாழ்த்து என அச்சிடப்பட்ட வாழ்த்து அட்டைகளையே இவ்வாறு வழங்கி வருகின்றனர். யாழ்ப்பாண குடாநாடு முழுவதும் பரவலாக கடந்த மூன்று நாட்களாக இராணுவத்தினர் அமோகமாக வாழ்த்து சொல்லி வருகிறார்கள்.
அத்துடன் தீபாவளியை முன்னிட்டு படையினர் பல்வேறு பகுதிகளில் கலைநிகழ்வுகளையும் நடத்தவிருப்பதாகவும் அழைப்பிதழ்களினில் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் இராணுவத்தினர் பதிவு நடவடிக்கைகளிற்காகவே வீடு வருவதாக அச்சங்கொண்டு மக்கள் முடங்கிவருகின்றனர். மக்களது மனம் கவரும் நோக்கினிலேயே இம்முயற்சி நடப்பதாக கூறப்படுகின்றது.
19 அக்டோபர் 2014
கமிஷனர் அலுவலகத்தில் காத்திருக்கும் ஐங்கரன் கருணா!

ங்கரன் தரப்பு மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து மேற்கொண்டு பேசலாம் எனக் கூறி கருணாமூர்த்தியை கமிஷனர் அலுவலகத்திலேயே காத்திருக்க வைத்துள்ளனர். கத்தி படத்துக்கு இன்று முதல் டிக்கெட் முன்பதிவு என்று அறிவித்திருந்தனர். ஆனால் எந்த அரங்கிலும் முன்பதிவு தொடங்கவில்லை. அதேநேரம், தமிழகத்தில் வெளியாகாவிட்டாலும் பரவாயில்லை, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் படத்தை 22-ம் தேதி வெளியிடுவதில் உறுதியாக உள்ளதாம் லைகா.
17 அக்டோபர் 2014
நீதிபதியிடம்'குட்டு'வாங்கிய சு.சுவாமி!
![]() |
சு.சுவாமி |
ஜெயலலிதாவின் வழக்கறிஞர் நாரிமன் தனது வாதங்களை முன்வைத்து வாதாடினார். அவரது வாதங்களுக்கு குறுகிட்டு தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியும் கருத்து தெரிவித்தும் வந்தார். பின்னர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் புகார்தாரர் என்ற அடிப்படையில் சுப்பிரமணிய சுவாமி கருத்து தெரிவிக்க அனுமதிக்கப்பட்டது.
அப்போது சுப்பிரமணியன் சுவாமி ,
தமிழகத்தில் மிகப் பெரிய வன்முறை வெடித்துள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக கேலிசித்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது. அதனால் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் தரக் கூடாது. ஜெயலலிதா இந்த வன்முறைகளைக் கட்டுப்படுத்தவில்லை. அவர் ஒருவார்த்தை கூறியிருந்தால் போதும்.. ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. ஒட்டுமொத்த அமைச்சரவையுமே கர்நாடகாவுக்கு வந்துவிட்டது.. அவரது அமைச்சர்கள் எவருமே அழாமல் பதவியும் ஏற்கவில்லை என்றார்.
இதன் பின்னர் இதற்கு பதிலளியுங்கள் என்கிற விவதமாக ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் நாரிமன் பக்கம் தலைமை நீதிபதி தத்து திரும்பினார்.
"இந்த நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட விவரங்கள் அனைத்தும் அவர்களுக்குத் தெரிவிக்கப்படும். கட்சியினருக்கு ஜெயலலிதா உத்தரவு பிறப்பிப்பார். அவர் அரசியல் தார்மீக நடைமுறைகளை நிச்சயம் கடைபிடிப்பார் என உறுதி கூறுகிறேன் என்றார் நாரிமன்.
இதனைத் தொடர்ந்து சுப்பிரமணியமணி சுவாமி பக்கம் திரும்பிய தத்து நன்றாக குட்டு வைத்தார்.
சுப்பிரமணியன் சுவாமியைப் பார்த்தபடி, "ஒரு நபர் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பின்னர் நாட்டை விட்டு ஓட முயற்சித்தால் மட்டுமே அசாதாரண சூழ்நிலையாக கருதப்படும். ஜெயலலிதாவின் கட்சித் தொண்டர்கள் அப்படி நடந்து கொண்டால் அவர் என்ன செய்ய முடியும்? அவர்தான் வன்முறையில் ஈடுபடச் சொன்னார் என்று ஏதாவது ஆதாரம் உண்டா? என்று கேட்டார் தலைமை நீதிபதி தத்து.
இதை சற்றும் எதிர்பார்க்காத சுப்பிரமணியன் சுவாமி திருதிருவென முழித்தபடி அடங்கிப் போனார்.
16 அக்டோபர் 2014
மட்டக்களப்பில் தூக்கில் தொங்கிய இரு சடலங்கள் மீட்பு!

இன்று வியாழக்கிழமை காலை சின்ன ஊறணி, செழியன் வீதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்தே இந்த சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.
இவர் சடலம் மீட்கப்பட்ட வீட்டின் உரிமையாளரான சுந்தரநாதன் சந்திரகுமார் (57வயது) என மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு சென்ற நீதிவான் விசாரணைகளை மேற்கொண்டதுடன் பிரேத பரிசோதனைகளுக்காக சடலத்தினை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லுமாறு பணித்தார்.
குடும்ப பிரச்சினை காரணமாகவே இவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
இதேபோன்று மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிழடித்தீவில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
மகிழடித்தீவினை சேர்ந்த அருணாசலம் கிருபாகரன் (32) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.
15 அக்டோபர் 2014
யாழில் ஐஸ்கிறீம் கடைகளுக்கு சீல்!

14 அக்டோபர் 2014
"மு.அ. டக்ளஸ் தேவானந்தா-முதுகெலும்பில்லாத அமைச்சர் என்று சொல்ல வரவில்லை!

வித்தார்.
யாழில் சிங்களவர்களை குடியேற்றப்போகும் மகிந்த!
வட மாகாணத்தில் இருந்து வெளியேறிய சிங்கள மக்களை குடியேற்றப் போவதாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற வடமாகாண ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தெரிவித்துள்ளார். சிங்கள மக்களுக்கு யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் காணிகள் இருந்ததாகவும், அவர்களை விரைவில் குடியேற்றப்போவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.நாம் மகாவலி கங்கையை வடக்கு மாகாணத்திற்கு கொண்டுவர முயற்சிக்கின்றோம். வடக்கில் போரினால் இடம்பெயர்ந்த மக்களுடைய மீள்குடியேற்றம் நிறைவடைந்து விட்டதாகவும், அடுத்தக் கட்டமாக இங்கிருந்து வெளியேற்றப்பட்ட சிங்கள மக்களையும் குடியேற்ற வேண்டுமெனவும் அதற்கான காலம் வந்து விட்டதாகவும் ஜனாதிபதி மேலும் கூறியிருந்தார்.எனினும் வலிகாமம் வடக்கிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட சுமார் ஒரு இலட்சம் வரையான தமிழ் மக்கள் கடந்த 24 வருடங்களாக அகதி வாழ்க்கையினை வாழ்ந்துவருவது குறிப்பிடத்தக்கது.
12 அக்டோபர் 2014
அகதிகள் விடயத்தில் அவுஸ்திரேலியாவில் மாற்றம் வரலாம்!

இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் அகதிகள் தொடர்பில் ஆஸ்திரேலியா கடுமையான நடைமுறைகளைப் பின்பற்றி வருகிறது.இந்த விடயம் ஐக்கிய நாடுகளின் அகதிகள் பேரவை உட்பட பல சர்வதேச அமைப்புகளாலும் விமர்சிக்கப்படுகின்றது. தற்போது ஆஸ்திரேலியா ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்ஸின் அங்கத்துவத்தை பெற முயற்சி செய்கின்றது.இதனால் அகதிகள் நிலைப்பாடு தொடர்பில் தனது இறுக்கமான கொள்கைகளை சற்றுத் தளர்த்துவதற்கு யோசிக்கின்றது. இதனை அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஜுலி பிஷப்பும் உறுதி செய்தார் என்று அந்தச் செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.
10 அக்டோபர் 2014
உலக இளவரசிப்போட்டியில் தமிழ் பெண்!

பெண் உலக அளவிலான படத்தை வெல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.போட்டியில் எல்லா சுற்றுகளும் முடிந்து விட்ட நிலையில், இறுதி சுற்றாக மக்களிடம் யாரை தேர்ந்தெடுப்பது என இணையம் மூலம் வாக்கு நடைபெற்று வருகின்றது. இதில் தனக்கு வாக்களிக்க வேண்டும் என உலக தமிழர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் அபிஷேகா ல்லயோட்சன். இவர் ஏற்கனவே இளம் வயதினருக்கான மிஸ் கனடா பட்டதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அபிஷேகா ல்லயோட்சன் (Abissheka Lloydson) உலக இளவரசி பட்டதை வெல்வதற்கு உங்கள் வாக்குகளை பதிவு செய்ய விரும்பினால் கீழ்க்கண்ட இணையதளத்திற்கு செல்லுங்கள் உங்களது பதிவுகளை தந்து வெற்றிபெறவையுங்கள் பெருமை சேருங்கள்.
http://contest.missprincessworld.com/
09 அக்டோபர் 2014
"நாஞ்சில் சம்பத் ராசியானவர்"முகநூலில் கிண்டல்!

08 அக்டோபர் 2014
முல்லையில் மகளிர் கொள்ளையணி கைது!

இந்த பெண்கள் கொள்ளையிட்ட பொருட் தொகை ஒன்று புதுக்குடியிருப்பு பிரசேதத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனவாம்.
மின்சார தளபாட விற்பனை நிலையங்கள், ஆடை விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள் போன்றவற்றை உடைத்து, இந்த பெண்கள் பணம் மற்றும் பொருட்களை கொள்ளையிட்டு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட பெண்கள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர் எனக் கூறப்படுகிறது.
07 அக்டோபர் 2014
வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவில்லை!

06 அக்டோபர் 2014
நாளை பிணை கிடைக்க வாய்ப்பு-முன்னாள் அரசு வழக்கறிஞர்

05 அக்டோபர் 2014
புலம்பெயர் அமைப்புக்களின் தடையை நீக்குமாறு கோரிக்கை!

03 அக்டோபர் 2014
மகிந்த தவறாக கூறியுள்ளார் என்கிறது அமெரிக்கா!

02 அக்டோபர் 2014
மாணவி மீது பலாத்காரம்!வாகன ஓட்டுனர் கைது!
கண்டியில் உள்ள பிரபல மகளிர் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 17 வயது மாணவியை பாடசாலை வேனுக்குள் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கண்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து கண்டி வாவி சுற்றுவட்ட சிவப்பு மதகு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் ஒன்றில் வல்லுறவு முயற்சி இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளை பொலிஸார் சந்தேகநபரை மடக்கிப்படித்துள்ளனர்.குறித்த மாணவி வேன் சாரதியால் மூன்று வருடங்களாக இவ்வாறு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 37 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.சாரதியின் வேன் கறுப்புக் கண்ணாடி பொருத்தப்பட்டதெனவும் அது அகில இலங்கை அனைத்து மாவட்ட பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து சேவை சங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவி வைத்திய பரிசோதனைக்கென கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்படுகிறது.
பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவி வைத்திய பரிசோதனைக்கென கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்படுகிறது.
01 அக்டோபர் 2014
வழக்கை விசாரிக்காமல் தீர்ப்பை ஒத்திவைத்த நீதிபதி!

30 செப்டம்பர் 2014
செல்வி ஜெயலலிதா ஜெயராம் நாளை வெளியே வருகிறார்?

29 செப்டம்பர் 2014
மகிந்தவின் அமைச்சர்கள் ஐ.தே.கட்சியில் இணையவுள்ளனராம்?

28 செப்டம்பர் 2014
முதல்வருக்கு எதிரான தீர்ப்பிற்கு ஜெத்மலானி கண்டனம்!

26 ஆகஸ்ட் 2014
மைத்திரியை உளவு பார்த்தார் கோத்தா!
அமைச்சர் மைத்திரிபால சிறிசேனாவை வேவுபார்ப்பதற்காக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவினால் அனுப்பப்பட்ட நபரை அமைச்சர் கண்டுபிடித்துள்ள சம்பவம் ஆளும்கட்சி வட்டாரங்களில் பெரும்பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது:
பண்டார என்ற பொலிஸ் உத்தியோகத்தரை கோத்தபாய அமைச்சரை வேவு பார்ப்பதற்காக அவரின் மெய்ப்பாதுகாப்பு வட்டத்திற்குள் புகுத்தியுள்ளார்.
அமைச்சரின் மெய்ப்பாதுகாப்பு பிரிவில் சில காலம் பணியாற்றிய இந்த நபர், அமைச்சரின் நடவடிக்கைகள், அவரை சந்திக்க வருபவர்கள் அவரது நண்பர்கள் குறித்த விபரங்களை நாளாந்தம் வழங்கிவந்துள்ளார். இதற்காக அந்நபரிற்கு 50.000 வழங்கப்பட்டுள்ளது.
எனினும் அமைச்சரினால் பிடிக்கப்பட்டதும் அந்நபர் சகல உண்மைகளையும் கக்கியுள்ளார். அதனை தொடர்ந்து ஏனைய பல மூத்த அமைச்சர்கள் மத்தியில் தமது பாதுகாப்பு பிரிவினர் குறித்து மாத்திரமல்லாமல் ஏனைய பணியாளர்கள் குறித்தும் அச்சம் தோன்றியுள்ளது. தங்களிடம் பணி புரிபவர்களில் எத்தனை பேர் கோத்தாவின் விசுவாசிகள் என்ற மறைமுக கணக்கெடுப்பை அவர்கள் ஆரம்பித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது:
பண்டார என்ற பொலிஸ் உத்தியோகத்தரை கோத்தபாய அமைச்சரை வேவு பார்ப்பதற்காக அவரின் மெய்ப்பாதுகாப்பு வட்டத்திற்குள் புகுத்தியுள்ளார்.
அமைச்சரின் மெய்ப்பாதுகாப்பு பிரிவில் சில காலம் பணியாற்றிய இந்த நபர், அமைச்சரின் நடவடிக்கைகள், அவரை சந்திக்க வருபவர்கள் அவரது நண்பர்கள் குறித்த விபரங்களை நாளாந்தம் வழங்கிவந்துள்ளார். இதற்காக அந்நபரிற்கு 50.000 வழங்கப்பட்டுள்ளது.
எனினும் அமைச்சரினால் பிடிக்கப்பட்டதும் அந்நபர் சகல உண்மைகளையும் கக்கியுள்ளார். அதனை தொடர்ந்து ஏனைய பல மூத்த அமைச்சர்கள் மத்தியில் தமது பாதுகாப்பு பிரிவினர் குறித்து மாத்திரமல்லாமல் ஏனைய பணியாளர்கள் குறித்தும் அச்சம் தோன்றியுள்ளது. தங்களிடம் பணி புரிபவர்களில் எத்தனை பேர் கோத்தாவின் விசுவாசிகள் என்ற மறைமுக கணக்கெடுப்பை அவர்கள் ஆரம்பித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
25 ஆகஸ்ட் 2014
விஜயும் முருகதாசும் லைகாவினரால் மிரட்டப்பட்டார்களாம்?

24 ஆகஸ்ட் 2014
பாஜக ராஜபக்ஷவுக்குத்தான் விசுவாசமாக உள்ளது!

தமிழகத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டும் கடைமடை வரை தண்ணீர் செல்லவில்லை. கடைசி பகுதி வரை தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதை எதிர்த்து போராட விடாமல் மக்கள் சாதி, மதம், மற்றும் இனத்தின் பெயரால் பிரிக்கப்பட்டு வருகின்றனர். தென் மாவட்டத்தில் சாதாரண மனிதராக இருந்த ஒருவர் தாது மணல் விற்று இன்று கோடீஸ்வரராக வலம் வருகிறார். தாது மணல் உள்ளிட்ட கனிம வளத்தையும், இயற்கை வளத்தையும் பாதுகாக்க தவறினால் வருங்கால வாரிசுகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக நேரிடும் என்றார் நல்லகண்ணு.
23 ஆகஸ்ட் 2014
மோடி கூட்டமைப்பினரை சந்தித்தார்!

22 ஆகஸ்ட் 2014
லைகாவின் பெயரை நீக்கி புதிய பெயரில் "கத்தி"விளம்பரம்!
கத்தி படத்தின் பிரச்சினையை, சீமான் ஆலோசனைப்படி மெல்ல தீர்த்துவிட முடியும் என நம்புகிறார்கள் முருகதாஸ் அன்ட் கோ. சீமானின் ஆலோசனைப்படி, லைகா நிறுவனத்தின் பெயரை மட்டும் தூக்கிவிட்டு படத்தை வெளியிடலாம் என முடிவு செய்து அதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கிவிட்டனர்.லைகாவுக்கு பதில் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்தை தயாரிப்பாளராக்கியுள்ளார்கள். லைகா போட்ட பணத்தை எப்படி செட்டில் செய்தார்கள் என்ற விவரம் வெளியாகவில்லை. அந்த செட்டில்மென்ட் முடிந்ததா அல்லது எதிர்ப்புகளைச் சமாளிக்க பெயரை மட்டும் மாற்றிக் கொண்டு, சைலன்ட் தயாரிப்பாளர்களாக லைகாகாரர்கள் தொடர்கிறார்களா என்பது இனிமேல்தான் தெரியவரும். லைகா வெளியேறிவிட்டது என்பதைக் காட்டும் வகையில், இன்று மாலை கத்தி படத்தின் புதிய போஸ்டர்களை வெளியிடவிருக்கிறார்கள். அதில் லைகாவுக்கு பதில் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் தயாரிக்கும் கத்தி என்ற மாற்றத்தைச் செய்துள்ளார்களாம். மாலை 6 மணிக்கு மேல் கத்தி புதிய போஸ்டர் வெளியாகும் எனத் தெரிகிறதது.
21 ஆகஸ்ட் 2014
புங்குடுதீவு நபர் நஞ்சருந்தி தற்கொலை!
களவு மற்றும் கொள்ளை ஆகிய குற்றச் செயல்கள் தொடர்பில் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்ட நபர் நஞ்சு விதையொன்றை உண்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஊர்காவற்றுறையில் உள்ள பொலிஸார் தெரிவித்தனர் என அறியவருகிறது.
புங்குடுதீவு 2ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த இராசநாயகம் றொனாட்றீகன் (வயது 32) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
புதன்கிழமை (20) மதியம் நஞ்சு விதையொன்றை உட்கொண்ட இவர் உடனடியாக புங்குடுதீவுப் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து, மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு புதன்கிழமை (20) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர் மேலும் கூறப்பட்டுள்ளது.
புங்குடுதீவு 2ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த இராசநாயகம் றொனாட்றீகன் (வயது 32) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
புதன்கிழமை (20) மதியம் நஞ்சு விதையொன்றை உட்கொண்ட இவர் உடனடியாக புங்குடுதீவுப் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து, மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு புதன்கிழமை (20) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர் மேலும் கூறப்பட்டுள்ளது.
20 ஆகஸ்ட் 2014
கத்தி,புலிப்பார்வைக்கு தமிழக அரசு தடை விதிக்கக்கூடும்!
சர்ச்சைக்குரிய புலிப்பார்வை மற்றும் கத்தி திரைப்படங்களுக்கு தமிழக அரசு தடை விதிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. வேந்தர் மூவிஸின் புலிப்பார்வை திரைப்படம், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மகனை சிறார் போராளியாக சித்தரிக்கிறது. வேந்தர் மூவிஸ் நிறுவனமானது எஸ்.ஆர்.எம். குழுமத்துக்கு சொந்தமானது. இக்குழுமம் இலங்கையிலும் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது. இதேபோல் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் குடும்பத்தினருக்கு சொந்தமான லைக்கா நிறுவனம் நடிகர் விஜய் நடிக்கும் கத்தி திரைப்படத்தை தயாரிக்கிறது.இந்த இரு படங்களையும் தமிழகத்தில் வெளியிட அனுமதிக்கக் கூடாது என்று 65 இயக்கங்களின் தலைவர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். சென்னையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் வேல்முருகன் ஒருங்கிணைப்பில் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பெரும்பாலான அரசியல் கட்சிகள், தமிழர் இயக்கங்கள், மாணவர் அமைப்புகள், மனித உரிமை இயக்கங்கள் கலந்து கொண்டன. இக்கூட்டத்தில் கலந்து கொள்ளாத இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கூட கத்தி, புலிப்பார்வை திரைப்படங்களை வெளியிடக் கூடாது என்ற கோரிக்கையை ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளது. கத்தி, புலிப்பார்வை திரைப்படங்களை வெளியிட்டால் அனைத்து இயக்கங்களும் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்துள்ளனர். இப்படி விஸ்வரூபமெடுத்திருக்கும் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கத்தி மற்றும் புலிப் பார்வை திரைப்படங்களுக்கு அதிரடியாக தமிழக அரசு தடை விதிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
19 ஆகஸ்ட் 2014
பாலகியை துஷ்பிரயோகம் செய்த அரக்கன் கைது!
கடைக்குச் சென்ற 5 வயதுச் சிறுமியை கடைக்குள் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில்,உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 50 வயதான வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான நபர் நேற்று யாழ்.சிறுவர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது எதிர்வரும் முதலாம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். சிறுவர் நீதிமன்ற நீதிவான் கறுப்பையா ஜீவராணி உத்தரவிட்டார். கடைக்குச் சென்ற சிறுமி வீட்டுக்குத் திரும்பிவர தாமதமானதை அடுத்து அதற்கான காரணம் குறித்து சிறுமியின் தாய் கேட்டுள்ளார்.
இதன்போதே தன்னிடம் கடைக்காரர் நடந்து கொண்ட விதம் குறித்து சிறுமி எடுத்துக் கூறியுள்ளார். இதனையடுத்து, மேற்படி சம்பவம் தொடர்பில் சிறுமியின் பெற்றோர், கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை முறைப்பாடு செய்தனர். இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபரான குறித்த பெட்டிக்கடை உரிமையாளர் கைதுசெய்யப்பட்டார் என தெரிவிக்கப்படுகிறது.
இதன்போதே தன்னிடம் கடைக்காரர் நடந்து கொண்ட விதம் குறித்து சிறுமி எடுத்துக் கூறியுள்ளார். இதனையடுத்து, மேற்படி சம்பவம் தொடர்பில் சிறுமியின் பெற்றோர், கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை முறைப்பாடு செய்தனர். இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபரான குறித்த பெட்டிக்கடை உரிமையாளர் கைதுசெய்யப்பட்டார் என தெரிவிக்கப்படுகிறது.
18 ஆகஸ்ட் 2014
தம்பாட்டி மக்களுக்கு நீர் விநியோகம்!

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)