23 ஆகஸ்ட் 2014

மோடி கூட்டமைப்பினரை சந்தித்தார்!

பிரதமர் நரேந்திர மோடியுடன் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து பேசினர். இந்தச் சந்திப்பு இன்று சனிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு நடைபெற்றது. இந்தச் சந்திப்பின்போது இலங்கையில் 13 ஆவது அரசியல் சட்டத்திருத்தம் அமுல்படுத்துவது குறித்து ஆலோசனை செய்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பின்னர் முதன்முறையாக கூட்டமைப்புப் பிரதிகள் அவரைச் சந்தித்து பேசியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக