13 ஆகஸ்ட் 2014

ஊர்காவற்றுறையில் உரம் பயன்படுத்தி வெல்லம் தயாரித்தமை கண்டுபிடிப்பு!

மனித பாவனைக்கு உதவாதது எனக் கருதப்படும் பொஸ்பேட் அடி உரம் பயன்படுத்தி பனைவெல்லம் தயாரித்த ஊர்காவற்றுறை பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் பனை வெல்ல நிலையம் இன்று சுகாதாரப் பரிசோதகர்களால் சீல் வைக்கப்பட்டது. நேற்று சுகாதாரப் பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனையின் போது பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்க பனை வெல்ல நிலையத்தின் ஐலண்ட் பாம் (Island Plam) பனை வெல்ல உற்பத்திக்காக விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் - மனிதப் பாவனைக்கு ஒவ்வாத பொஸ்பேட் (அடி உரம்) பாவித்தமை கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறப்பட்டது. சுகாதாரப் பரிசேதகர்களால் அங்கு கைப்பற்றப்பட்ட பனைவெல்லம் மற்றும் அடி உரம் என்பன இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் பராப்படுத்தப்பட்டன. விசாரணை மேற்கொண்ட ஊர்காவற்றுறை நீதிவான் எஸ்.லெனின்குமார் பனை வெல்ல நிலையத்தை சீல் வைக்குமாறு சுகாதரப் பரிசோதகர்களுக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் 18ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக