04 ஆகஸ்ட் 2014

வவுனியாவில் லொறிக்கு தீவைப்பு!

வவுனியா, பண்டாரிக்குளம் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறிக்கு இனந்தெரியாத நபர்கள் தீ வைத்துள்ளனர் என்று வவுனியா பொலிஸார் தெரிவித்துள்னர். நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் லொறி தீப்பற்றி எரிந்தது என்று தெரிவிக்கப்படுகிறது. வவுனியா, பண்டாரிகுளம் வீதியில் உள்ள வாகன திருத்துமிடம் ஒன்றில் திருத்த வேலைகளுக்காக நிறுத்தப்பட்டிருந்த லொறிக்கே தீ வைக்கப்பட்டுள்ளது. வீதியால் பயணித்தவர்கள் இதனை அவதானித்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு சென்ற பொலிஸார் தீயை அணைத்தனர் என்று தெரிவிக்கப்பட்டது. குறித்த லொறி கிளிநொச்சியைச் சேர்ந்தவருடையது என்று தெரியவந்துள்ளது இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக