19 ஆகஸ்ட் 2014

பாலகியை துஷ்பிரயோகம் செய்த அரக்கன் கைது!

கடைக்குச் சென்ற 5 வயதுச் சிறுமியை கடைக்குள் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில்,உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 50 வயதான வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான நபர் நேற்று யாழ்.சிறுவர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது எதிர்வரும் முதலாம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். சிறுவர் நீதிமன்ற நீதிவான் கறுப்பையா ஜீவராணி உத்தரவிட்டார். கடைக்குச் சென்ற சிறுமி வீட்டுக்குத் திரும்பிவர தாமதமானதை அடுத்து அதற்கான காரணம் குறித்து சிறுமியின் தாய் கேட்டுள்ளார்.
இதன்போதே தன்னிடம் கடைக்காரர் நடந்து கொண்ட விதம் குறித்து சிறுமி எடுத்துக் கூறியுள்ளார். இதனையடுத்து, மேற்படி சம்பவம் தொடர்பில் சிறுமியின் பெற்றோர், கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை முறைப்பாடு செய்தனர். இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபரான குறித்த பெட்டிக்கடை உரிமையாளர் கைதுசெய்யப்பட்டார் என தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக