10 ஆகஸ்ட் 2014

விசுவமடுவில் ஆணின் சடலம் மீட்பு!

முல்லைத்தீவு விசுவமடுப்பகுதியில் பஸ் தரிப்பு கட்டடத்தில் இருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தொட்டியடி, விசுவமடுவைச் சேர்ந்த எஸ்.ஜோர்ஜ் (வயது - 40) என்பவரே சடலமாக காணப்பட்டவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை பஸ் தரிப்பிட கட்டடத்துக்குள் சடலம் காணப்படுவது குறித்து அப்பகுதி மக்கள் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். அங்குவந்த பொலிஸார் சடலத்தை மீட்டு கிளிநொச்சி மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக