17 ஆகஸ்ட் 2014

இந்த கயவர்களால் ஆசிரியர்களுக்கு தலைகுனிவு!

மானிப்பாய் பிரதேசத்தில் மாணவி ஒருவரை வீடொன்றுக்கு அழைத்துச் சென்று தவறான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் ஒருவரை, கையும் மெய்யுமாகப் பிடித்த பொதுமக்கள் அவரை நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 10.30 மணியளவில் மானிப்பாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த ஆசிரியர் மானிப்பாய் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கற்பித்து வருபவர் என்றும் தெரியவருகிறது. குறித்த மாணவி கல்விகற்கும் பாடசாலை அதிபர் வழங்கிய தகவலையடுத்தே ஆசிரியர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு இருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக