14 ஆகஸ்ட் 2014

கடற்படை காடையனை நையப்புடைத்த மருதங்கேணி மக்கள்!

யாழ்.வடமராட்சி மருதங்கேணி, விநாயகபுரம் பகுதியில் பெண் ஒருவரை பலாத்காரம் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் சிறீலங்காவின் கடற்படைச் சிப்பாய் ஒருவர் கைது

செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதி வீடொன்றுக்குள் புகுந்த இந்த காடையன் 22 வயதான குடும்பப் பெண் ஒருவரை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளான்.
இதன்போது, அந்தப் பெண் கூக்குரலிட்டதைத் தொடர்ந்து அயல் வீட்டார்கள் ஓடி வந்து குறித்த காடையனை பிடித்து தாக்கியுள்ளனர்.
பின்னர் பொலிஸாருக்கு தகவல் வழங்கி பொலிஸாரிடம் இந்த சிறீலங்காவின் காடையனை ஒப்படைத்துள்ளனர்.
பொதுமக்களின் தாக்குதலுக்குள்ளான இவனை பளை மருத்துவமனையில் சிகிச்சைக்காக பொலிஸார் அனுமதித்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் குறித்த காடை ஆஜர்படுத்தப்பட்டதும், அவனை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக