30 ஏப்ரல் 2014

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மே தின அழைப்பு!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசும் இணைந்து நடாத்தும் சர்வதேச தொழிலாளர் தின ஊர்வலமும், பொதுக்கூட்டமும் எதிர்வரும் மே 1ம் திகதி இடம்பெறவுள்ளது.
மேற்படி நிகழ்விற்கு அனைவரையும் அணிதிரண்டு வருமாறு வடமராட்சி எங்கும் துண்டு பிரசுரம் மூலம் அழைப்பு விடுத்து வருகிறார்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள்.கஜேந்திரன்,கஜேந்திரகுமார் உட்பட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முக்கியஸ்தர்கள் அனைவரும் வீதிகளில் இறங்கி துண்டுப்பிரசுர விநியோகத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.கொள்கைகளை விட்டுக் கொடுக்காது தொடர்ந்து தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடி வரும் கட்சி தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்பது குறிப்பிடத்தக்கது.

இடம்: ஞானவைரர் ஆலய முன்றல், சாமியன் அரசடி, கரவெட்டி (நெல்லியடி – கொடிகாமம் வீதியிலுள்ள கரவெட்டி தபாற் கந்தோர் அருகாமை)

திகதி: 01-05-2014 (வியாழக்கிழமை)
நேரம்: பி.ப3.00 – பி.ப 6.00 மணிவரை

நன்றி
செ.கஜேந்திரன்
பொதுச் செயலாளர்

தொடர்புகளுக்கு : 0773024316, 0779599361, 0212223739
முகவரி : இல 43, 3ம் குறுக்குத் தெரு, யாழ்ப்பாணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக