13 ஏப்ரல் 2014

விநாயகம்,நெடியவனை கைது செய்ய சர்வதேச பொலிசை நாடுகிறதாம் சிங்களம்!

மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உயிரூட்டும் நடவடிக்கைகளுக்கு உதவும் நபர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளை விரிவுபடுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச அளவில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள சிலர் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை விநாயகம் மற்றும் நெடியவன் போன்றோறைக் கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அன்மையில் சுட்டுக்கொல்லப்பட்ட கோபி உள்ளிட்ட சந்தேகநபர்கள் மூவருக்கும், மீண்டும் நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை உருவாக்க உதவிகளை வழங்கியது இவர்கள் என பாதுகாப்பு பிரிவுத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக