28 ஏப்ரல் 2014

மரக்கறி இறக்குமதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை!

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்களின் ராஜாவான அல்போன்சா மாம்பழம் மற்றும் சில காய்கறிகளுக்கு தடை விதித்து ஐரோப்பிய யூனியன் உத்தரவிட்டுள்ளது.
பழங்களின் ராஜாவான இந்திய அல்போன்சா மாம்பழம் மற்றும் காய்கறிகளுக்கு எதிராக 28 உறுப்பினர்களை கொண்ட ஐரோப்பிய யூனியன் எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்கு அங்குள்ள எம்.பி.க்களும், இந்திய மக்கள் மற்றும் வியாபாரிகளும் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
2013 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த பழம் மற்றும் காய்கறிகளில் ஈக்கள், பூச்சிகளின் தாக்கம் அதிகம் இருந்ததை தொடர்ந்தே இந்த தடை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மாம்பழம் மற்றும் கத்திரிக்காய், முட்டை கோஸ், பாகற்காய், புடலங்காய் ஆகிய காய்கறிகளுக்கு தற்காலிக தடை விதித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இவையனைத்தும் 5 சதவிகிதத்திற்கும் குறைவான அளவுக்கே அங்கு இறக்குமதி செய்யும் நிலையில், இவற்றில் காணப்படும் ஈக்கள் மற்றும் பூச்சிகளால் தங்கள் நாட்டு விவசாயம் பாதிக்கும் என அந்நாடு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக