26 ஏப்ரல் 2014

பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட படையினரின் தொகை குறைவு என்கிறார் சவேந்திர!

சவேந்திரசில்வா,டயஸ் 
யுத்த காலத்திலும், அதன் பின்னரும், குறைந்த அளவான இராணுவ துருப்பினரே வடக்கில் பாலியல் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான பிரதி நிரந்தர வதிவிட பிரதிநிதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையில் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வடக்கில் இடம்பெற்ற பாலியல் துஸ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் இராணுவத்தினர் மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
ஆனால் யுத்த காலத்தில் 6 சதவீதமான சம்பவங்களிலும், அதன் பின்னர் 4 சதவீதமான சம்பவங்களிலுமே இராணுவத்தினர் தொடர்பு கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.ஏனைய பெரும்பாலான பாலியல் துஸ்பிரயோக சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களின் நெருங்கிய உறவினர்களே ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்த காலத்தின் போது இலங்கை இராணுவத்தினர் தமிழ் பெண்களுக்கு எதிராக பல்வேறு பாலியல் கொடுமைகளில் ஈடுபட்டதாக ஐக்கிய நாடுகளின் யுத்த கால பாலியல் கொடுமைகள் சம்பந்தமான சிறப்பு பிரதிநிதி சைனப் ஹாவா பங்குரா நேற்று தெரிவித்திருந்தார்.
அத்துடன் இலங்கை படையினரால் நடத்தப்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் சட்டத்தரணி யாஸ்மின் சூக்கா அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இவற்றுக்கு பதில் வழங்கும் வகையிலேயே சவேந்திரசில்வா இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக