17 ஏப்ரல் 2014

பார ஊர்தி கவிழ்ந்து படைகள் காயம்!

சிங்கள படைச்சிப்பாய்களை ஏற்றிக் கொண்டு கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த பார ஊர்தியொன்று மாங்குளம் - இந்திரபுரம் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 18 சிங்களப் படைச்சிப்பாய்கள் படுகாயமடைந்துள்ளனர்.
பார ஊர்தி வேகத்தை கட்டுப்படுத்த முடியாது வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்து இன்று (17.04.14) முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த சிங்கள சிப்பாய்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக