21 ஏப்ரல் 2014

மீசாலையில் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு!

யாழ் மீசாலைபகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயம் அடைந்துள்ளார். யாழ். மீசாலை பகுதியில் வாள்வெட்டுக்கு உள்ளாகி படுகாயமடைந்த மீசாலை வடக்கைச் சேர்ந்த சின்னராஜா சிவானந்தமூர்த்தி (வயது 34) என்ற குடும்பஸ்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மதுபோதையில் அட்டகாசம் புரிந்தவர்களை தடுப்பதற்குச் சென்றபோதே மேற்படி குடும்பஸ்தர் வாள்வெட்டுக்கு உள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியிலுள்ள விளையாட்டுக் கழகமொன்றின் மைதானத்திலிருந்த கரப்பந்தாட்ட வலையை மதுபோதையில் காணப்பட்ட சிலர் அறுத்தெறிந்ததுடன், மின்குமிழ்களையும் அடித்து நொருக்கிக் கொண்டிருந்தனர். இதனை தடுப்பதற்குச் சென்ற மேற்படி குடும்பஸ்தர் மீது மது போதையிலிருந்தவர்கள் வாளால் வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் உடனடியாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக தெரியவந்துள்ளது இது தொடர்பில் விரிவான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனராம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக