10 ஏப்ரல் 2014

சிங்களப் படைகளின் சித்திரவதையால் கருச்சிதைவு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சர்மிளா என்ற கர்ப்பிணிப் பெண், சிங்களப் படைகளின் சித்திரவதையில் கருச்சிதைவுக்கு ஆளாகியிருக்கின்றார்.தமிழீழ விடுதலைப் புலிகளைக் கைது செய்யும் புலிவேட்டை எனும் போர்வையில் கடந்த மார்ச் மாதம் 11ஆம் நாளன்று திருமலையில் சிங்களப் படைகளால் கைது செய்யப்பட்ட இவர், கொழும்பு கொண்டு செல்லப்பட்டுக் கடுமையான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
இதன் காரணமாக கருச்சிதைவுக்கு இவர் ஆளாகியுள்ளார்.
இருந்த பொழுதும் இவருக்குத் தகுந்த மருத்துவ சிகிச்சைகளை அளிக்காது தொடர்ந்தும் கொடூர வதைகளுக்கு சிங்களப் படையினர் உட்படுத்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக