18 ஏப்ரல் 2014

தமிழீழம் மலரும் என சுவரொட்டி ஒட்டினாராம்!

யாழ்.இந்து கல்லூரிக்கு அருகில் அநாமதேய துண்டுப்பிரசுரத்தினை ஒட்டியவர் என்ற குற்றச்சாட்டில் யாழ்.கொக்குவில் பகுதியினைச் சேர்ந்த 24 வயதுடைய ஜெயதாஸன் கஜானன் என்ற இளைஞனை நேற்று (17.04.14) கைது செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இளைஞன் நேற்று (17.04.14) இரவு அவ்விடத்தில் தமிழீழம் மலரும் என துண்டுப் பிரசுரத்தினை ஓட்டினார் என்ற குற்றச்சாட்டிலேயே நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த இளைஞன் ஒட்டிய துண்டுப்பிரசுரமும் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளதுடன், இளைஞன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக