16 ஜனவரி 2014

சிறீலங்காவிற்கு எதிராக கூட்டு நடவடிக்கை!

மார்ச் மாதம் ஜெனீவாவில் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் பேரவை அமர்வில் சிறிலங்காவுக்கு எதிராக அனைத்து மேற்கத்தைய நாடுகளும் பொதுவான நிகழ்ச்சி நிரலின் கீழ் இணைந்து செயற்படவுள்ளமை தொடர்பில் அரசுக்கு தகவல் கிடைத்துள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
மனித உரிமைப் பேரவையில் இவ்வாறு ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் சிறிலங்கா அரசை மிக இக்கட்டானதொரு நிலைக்குக் கொண்டு செல்ல அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகள் திடசங்கற்பம் கொண்டுள்ளன.
இதேவேளை, சிறிலங்கா அரசுக்கு ஆதரவான நாடுகளுடன் இந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடி அவர்களது ஆதரவையும் பெற மேற்கத்தைய நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.
மனித உரிமைப் பேரவையில் சிறிலங்கா அரசுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான தகவல்களை சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் அமைப்புகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்து பிரித்தானிய அரசு திரட்டி வருவதாகவம் திவயின தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக