22 ஜனவரி 2014

மஹிந்தரின் இறுதிப்பயணம் ஆரம்பம்!

ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லரின் இறுதிப் பயணம் எவ்வாறு அமைந்ததோ அவ்வாறானதொரு பயணத்தையே சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்தையர் ஆரம்பித்துள்ளார். ஜனநாயகத்தைப் பாதுகாப்பதாக கூறி ஆட்சிக்கு வந்த அவர் இன்று அதனை முற்றாக நாசம் செய்து விட்டார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இதுவே ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லரின் இறுதிப் பயணத்தின் ஆரம்பமாகவும் இருந்தது. மக்களின் ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை முப்படைகளையும் பொலிஸாரையும் கொண்டு அடக்கி ஒடுக்கி வருகிறார்.
அரசுக்கு எதிராகச் செயற்படுவோர்கள் அடக்கப்படுகிறார்கள், அழிக்கப்டுகிறார்கள். நாட்டில் காட்டுச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு காட்டுத் தர்பார் இன்று நடத்தப்படுகிறது இன்று இந்த நாட்டில் ஜனநாயகம் இல்லை, மனித உரிமைகள் விலை பேசப்படுகினறன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக