26 ஜனவரி 2014

சிறீலங்காவிற்கு எதிராக மூன்றாவது தீர்மானம்!

எதிர்வரும் வரும் மார்ச் மாத ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில், இலங்கைக்கு எதிராக 3வது தீர்மானம் ஒன்றை கொண்டு வரவுள்ளதாக, இலங்கை அரசாங்கத்துக்கு அமெரிக்கா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் இதுபற்றி தமக்குத் தெரியப்படுத்தியதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கொழும்பில் உடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இந்த மாதத்தின் முதல் வாரத்தில், இலங்கைக்கு எதிரான 3வது தீர்மானத்தை முன்வைக்க முடிவு செய்துள்ளதாக, அமெரிக்கத் தூதுவர் சிசன், தமக்குத் தெரியப்படுத்தி உள்ளதாகவும் அமைச்சர் பீரிஸ் கூறியுள்ளார்.
இவ்வாறான சூழலில் ஐநாவை எதிர்கொள்வதற்கான அனைத்து ராஜதந்திர நகர்வுகளையும் இலங்கை மிக வேகமாக ஆரம்பித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக