30 ஜனவரி 2014

கனடாவில் இளம் தமிழ் பெண் தற்கொலை முயற்சி!

கடந்த 2012ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் திருமணம் முடித்து கடந்த வருட இறுதியில் கனடா வந்த 24 வயதான குடும்பப் பெண் நஞ்சருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கனடா வந்து
சில மாதங்களே ஆன நிலையில் இவர் நஞ்சருந்தியுள்ளது யாழ்ப்பாணத்தில் உள்ள இவரது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இவரது கணவர் தனது உறவுக்காரரான பெண் ஒருவரது வீட்டிலேயே தங்கியிருந்ததாகவும் அவ் வீட்லேயே கணவருடன் குறித்த பெண்ணும் இருந்ததாகத் தெரிய வருகின்றது.
கணவரது உறவுக்காரப் பெண் கணவரிடம் இருந்து விவாகரத்துப் பெற்றவர் என்பதும் அப் பெண்ணுக்கு 28 வயதில் ஒரு மகன் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக