28 ஜனவரி 2014

காணாமல் போன இளைஞன் பொலிசில் சரண்!

யாழில் கடந்த 24 ஆம் திகதி காணாமல்போனதாக கூறப்படும் கொட்டடியினைச் சேர்ந்த இரு இளைஞர்களில் ஒருவரான மனோகரன் யதுசன் (17) என்பவர் யாழ்,பொலிஸ் நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை (27) சரணடைந்தததாக யாழ்,பொலிசார் தெரிவித்தனர்.
மேற்படி இளைஞனும் ரவி பிரதீபன் (17) என்ற இளைஞனும் கடந்த 26 ஆம் திகதி தங்களின் பெற்றோர்களது பணத்தினை எடுத்துக்கொண்டு கொழும்பு சென்றதாகவும் அதில் ரவி கண்டிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றமையால் தான் யாழ்ப்பாணத்திற்கு பஸ் ஏறி வந்துள்ளதாக குறித்த இளைஞன் பொலிசாருக்கு தெரிவித்துள்ளான்.
யாழ்.கொட்டடிப் பகுதியில் கடந்த 24 ஆம் திகதி நடைபெற்ற இசை நிகழ்ச்சியினைப் பார்வையிடுவதற்காக சென்ற மனோகரன் யதுசன் (17) மற்றும் ரவி பிரதீபன் (17) ஆகியோர் காணாமல் போனதாக அவர்களது உறவினர்களால் யாழ்,பொலிஸ் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக