15 ஏப்ரல் 2010

தொழில் கட்சியின் தேர்தல் அறிக்கை.

பிரித்தானியாவில் ஆளும் தொழில் கட்சி நடைபெறவுள்ள தேர்தல் குறித்த தமது விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளது. அதில் இலங்கையில் நடைபெற்ற போரில் உயிரிழந்த மக்களுக்கு புலிகளும் அரசுமே பதில் கூறவேண்டும் என முதலில் குறிப்பிட்டுள்ளது. பின்னர் போர் குற்றம் தொடர்பாக விசாரணைகளை நடத்த தாம் ஒத்துழைப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த முகவரியில் தொழில் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை தரவிறக்கம் செய்து பார்வையிடலாம்.




http://www2.labour.org.uk/manifesto-splash



பிரித்தானியாவின் பொதுத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், கணிசமாக தமிழர்கள் வாழும் பகுதிகளில் பிரித்தானிய கட்சிகள் தமிழர்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதில் பெரு ஆர்வம் காட்டிவருகின்றன. குறிப்பாக சில பிரித்தானிய எம்.பிக்களின் ஆசனத்தை உறுதிசெய்யும், அல்லது வெற்றியடையச் செய்வது தமிழர்கள் கைகளில் இருப்பதால், இத் தேர்தல் சமயத்தை தமிழர்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்துவது நல்லது. இத் தேர்தலில் தமிழர்கள் வாக்களிப்பதன் மூலம், அரசிடம் நாம் பேரம் பேசி எமது அரசியல் முன் நகர்வுகளை முன்னெடுக்க ஏதுவாக அமையும்.



பிரித்தானிய தொழில் கட்சி கூறியிருப்பது போல இலங்கை அரசுக்கு எதிராக போர் குற்ற விசாரணைகளை நடத்த உதவுமேயானால், அது ஒரு மிக முக்கிய நகர்வாகக் கருதப்படும். வெறுமனவே தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுவிட்டு, பின்னர் அவற்றை நிலுவையில் போடும் கட்சிகள் போல தொழில் கட்சி செயல்படாமல் இருக்க பிரித்தானிய தமிழ் அரசியல்வாதிகள் அழுத்தம் கொடுக்கவேண்டும் என்ற கருத்தும் மக்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக