29 ஏப்ரல் 2010

எசன் வாழ் தமிழர்களை பின்பற்றி,சுறா படத்தை புறக்கணிக்க தயாராகுங்கள் புலம்பெயர் தமிழர்களே!

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் தாக்கத்தை மிகவும்உணர்ந்தவர்களாகவும்,ஒரு பெரும் கொதிநிலைக்குள்தள்ளப்பட்டவர்களாகவும் ஜெர்மனியின் எசன் மாநகரத்தில்வாழும் தமிழர்கள் பொங்கி எழுந்தனர்,இளைஞர்களோ ஒருபடி மேலே சென்று,எசன் திரையரங்குகளில்தமிழ் சினிமாக்களை தடுத்து நிறுத்தினர்,இன்றுவரை எசன் நகரில் இந்திய தமிழ் திரைப்படங்கள்திரையிடப்படுவதில்லை என்பது,மானமுள்ள தமிழர்களுக்குமுன்மாதிரியாக எசன் வாழ் தமிழர்கள் விளங்குகிறார்கள்என்பதை பறைசாற்றி நிற்கின்றது.இதை இங்கு கோடிட்டு காட்டுவதன் அர்த்தம் என்ன என்பதைபுலம்பெயர் தமிழர்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்,மீண்டும் தலைவிரித்தாடும் சினிமா மோகம்,விஜயின் "சுறா"படவிளம்பரங்கள்,பல்லாயிரக்கணக்கான எம் உறவுகளை கொன்றொழித்த,எம் குலப்பெண்களை பாலியல் வக்கிரம் புரிந்த,எம் சொந்தங்களைஇன்றும்கூட முகாம்களுக்குள் அடைத்து வைத்திருக்கின்ற,சிறிலங்கன்இனவாத அரசோடு கூட்டிணைந்து மாபெரும் மனிதப்படுகொலைக்குதுணை நின்ற,இந்திய மத்திய அரசோடு கைகோர்த்து நிற்கும் விஜய் என்றஒரு நடிகனை தலையில் தூக்கி வைத்து கொண்டாட புறப்பட்டு விட்ட,தமிழர்கள்,எசன் வாழ் தமிழர்களை பின்பற்றியாவது தம்மை திருத்திக்கொண்டு,"சுறா"படத்தை புறக்கணிப்பதன் மூலம்,தமிழர்கள் தன்மானம்உள்ளவர்கள் என்பதை நிரூபித்து,தகுந்த பதிலடியை கொடுப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக