26 ஏப்ரல் 2010

அமிதாப்பச்சன் வீட்டின் முன் "நாம்தமிழர்"முற்றுகை போராட்டம்!







தமிழின அழிப்புக்குத்துணை போகும் அமிதாப் வீட்டு முன் நாம் தமிழர் முற்றுகைப் போராட்டம்
2010-04-26 01:32:34
தமிழினத்தை அழித்த இலங்கை அதனை மறைக்க கொழும்பு நகரில் சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழாவை வரும் ஜூன் 2 முதல் ஜூன் 4 ஆம் தேதி வரை இந்திய அரசின் உதவியுடன் நடத்த திட்டமிட்டுள்ளது. IIFA விருது என்பது பாலிவுட்டின் ஆஸ்கார் போன்றதாகும். உலகில் ஆஸ்காருக்கு அடுத்தபடியாக வெற்றிகரமான நிகழ்ச்சியென IIFA விருது மதிப்பிடப்படுகிறது..
பாலிவுட் திரை நட்சத்திரங்களான அமிதாப்பச்சன்,ஷாருக்கான், ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட பலரும் விழாமேடையில் தோன்றி இந்த விழாவிற்கு வலு சேர்க்க இருக்கின்றார்கள். மேலும் இந்த விழாவில் சில தமிழ் திரைப்படங்களும் திரையிடப்பட இருக்கின்றது. தமிழ் திரைப்பட நடிகர்கள் சிலரும் கலந்து கொள்ள திட்டமிட்டு இருக்கின்றார்கள்.
இந்திய திரைப்பட்த்துறை உதவியுடன் சிங்கள அரசு மேற்கொள்ளும் இந்த நிகழ்ச்சியானது தமிழினப்படுகொலையை உலகின் கவனத்தில் இருந்து மறைக்கவே உதவும்.உலகில் சிங்கள ஏகாதிபத்தியம் அம்பலப்பட்டு இருக்கும் இந்த வேளையில் அதனை மறைக்க உதவும் இந்த விருது வழங்கும் இந்த நிகழ்ச்சியை நாம் தமிழர் இயக்கத்த்தின் சார்பில் செந்தமிழன் சீமான் வன்மையாக கண்டித்திருந்தார்.
முதற்கட்டமாக நடிகர் அமிதாப் அவர்களை மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் ஞாயிறு அன்று ஜனநாயக முறைப்படி சந்தித்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்க உள்ளோம் என்றும் ஏற்கனவே அறிவித்திருந்தார்.அவரது உத்தரவின் படி நாம் தமிழர் இயக்கத்தின் மும்பை கிளை நிர்வாகிகள் நேற்று நடிகர் அமிதாப் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தின் காரணமாக IIFA விருது விழாவை நடத்தும் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடந்த இடத்துக்கே விரைந்து வந்தனர். IIFA வின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் திரு. அமிதாப் ஆகியோர் நமது நாம் தமிழர் இயக்கத்தின் பொறுப்பாளர்களை அழைத்து கோரிக்கைகளை கேட்டறிந்தனர். ஈழத்தமிழர்களின் நிலையும், சிறீலங்காவின் போர் குற்றங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. IIFA அனைத்து நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டி இப்பிரச்னை தொடர்பாக இறுதி முடிவு எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.தமிழர்களின் கோரிக்கைகள் நிறைவேற வில்லை என்றால் அடுத்தகட்ட போராட்டம் விரைவில் அறிவிக்கப்படும் என்று நாம் தமிழர் இயக்கம் அறிவித்துள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மும்பை நிர்வாகிகள் ராஜேந்திரன்,வழக்கறிஞர் கணேசன்,அர்ஜூன்,அக்கா,மருத்துவர் ராஜா,கண்ணிவெடி கந்தசாமி,பரிமளம்,கென்னடி,சிவராமன்,சுரேஷ்,தங்க டேனியல், சுந்தரம்,ஆகியோர் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக