23 ஏப்ரல் 2010

பண்டாரவன்னியன் நினைவுத் தூபியை தகர்த்தது சிங்கள காடையர் கூட்டம்!






தமிழர்களின் வரலாற்றுச் சின்னங்களை அழிக்கும் சிறிலங்காவின் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக முல்லைத்தீவு மாவட்டம் கற்சிலை மடு பிரதேசத்தில் அமைந்துள்ள பண்டார வன்னியன் நினைவுச் சின்னம் உடைக்கப்பட்டுள்ளது.
இவ் நினைவுச் சின்னமானது ஆங்கிலேயரால் பண்டாரவன்னியனுக்கு அமைக்கப்பட்டிருந்தது சுட்டிக்காட்டத்தக்கது. இதேவேளை இப்பகுதியில் கடுமையான சண்டை நடைபெற்றபோது கூட இவ் நினைவு சின்னம் அழிக்கப்படவில்லை என்பது தெரிந்ததே.

பண்டாரவன்னியன் நினைவுச்சின்னம் உடைக்கப்பட்ட நிலையில்
இப்பகுதியில் மக்கள் மீள குடியமர்ந்துள்ளபோதும் கூட இதற்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட்டு இருக்கவில்லை எனவும் வாக்களிப்பு நடைபெறுவதற்கு 10 நாட்கள் இருக்கும் வரையில் இவ் நினைவுச்சின்னம் அழிக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
இது சில விஷமிகளின் கீழ்தரமான வேலை என கருதப்படுகிறது. இதற்கு அருகில் உடைந்த மண்டபம் ஒன்றும், பொது நோக்கு மண்டபம் ஒன்றும் இருக்கின்றபோதும் விளையாட்டு மைதானம் இவ் ஊர் இளைஞர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றபோதும் இவ் நினைவுச்சின்னம் யாருமற்று கவனிக்கப்படாமல் இருப்பதாக தெரியவருகிறது. இதனை பராமரிப்பதற்கு எவரும் முன்வராதது மிகவும் வேதனையான விடயமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக