20 ஏப்ரல் 2010

கருணாநிதிக்கு வக்காலத்து வாங்கும் இரு வேடதாரிகள்!




தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் தமிழினத்துரோகசெயற்பாடுகளுக்கு வக்காலத்து வாங்கும்,திராவிடர் கழகதலைவர் கி.வீரமணியும்,விடுதலை சிறுத்தைகள் தலைவர்தொல்.திருமாவளவனும்,தமிழீழதேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின்தாயார் திரு,வேலுப்பிள்ளை பார்வதி அம்மா ஆறுமாத காலவிசாவை சட்டப்படி பெற்று சென்னை வந்தவேளை,கருணையற்றகருணாநிதி அரசு ஈவிரக்கமற்ற முறையில் ஒரு நோய்வாய்ப்பட்டமூதாட்டி என்றும் பாராமல் விமான நிலையத்தில் வைத்தேமலேசியாவிற்கு திருப்பி அனுப்பியது.இச்செயலுக்கு பல்வேறுபட்ட அமைப்புகளும்,அரசியல் கட்சிகளும்கண்டனம் வெளியிட்டு வரும் நிலையில்,இந்த இரு வேடதாரிகளும்நடந்த செயலுக்கு ஜெயலலிதாவே காரணமெனவும்,2002ம் ஆண்டுமத்திய அரசிடம் ஜெயலலிதா பெற்ற தடையுத்தரவினால்தான்இப்படி நேர்ந்ததாகவும்,அப்பாவி முதல்வர் கருணாநிதிக்கு எதுவுமேதெரியாதென்பது போலவும் கருத்துக்களை தெரிவித்திருப்பதானதுதமிழர் மனங்களை மீண்டும் குத்தி காயப்படுத்தும் செயலாகவேநோக்கவேண்டியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக