23 ஏப்ரல் 2010

முத்துக்குமார் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம்,சீமான் ஆவேசப்பேச்சு!




அன்னை பார்வதி அம்மாள் அவர்களின் மருத்துவ சிகிச்சைக்கு தமிழ்நாட்டில் அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்தும் நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் அவர்களை கைது செய்ததைக் கண்டித்தும் நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் இன்று புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டமும் பொதுக்கூட்டமும் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.

இந்தப் பொதுக்கூட்டத்தில் செந்தமிழன் சீமான்,மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ்ச்செல்வன்,நல்லதுரை,வெற்றிக்குமரன்,சிவக்குமார்,மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சிவகங்கை தீனதயாளன்,நாகை மாறன்,ராஜ்குமார்,புதுக்கோட்டை சத்திய மூர்த்தி,ஜெயசீலன்,வழக்கறிஞர் ஜெயந்தன்,காளிமுத்து திருச்சி செயந்தி,வழக்கறிஞர் பிரபு,தஞ்சாவூர் அருட்குமரன்,ஈரோடு பேரறிவாளன்,திருப்பூர் செல்வம்,ராமநாதபுரம் தமிழன்பன்,தேனி முருகன்,ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், ‘’என் தம்பி முத்துக்குமார் தியாகத்தை வென்றவன். அவன் நாட்டில் வாழ்ந்ததை விட காட்டிலும்,சிறையிலும் வாழ்ந்ததுதான் அதிகம்.

அந்த தம்பி மீதுதான் ரத்த பொட்டலம் மருந்துகள் கடத்தியதாக வழக்கு போடப்பட்டிருக்கிறது. அதுவும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கடத்தியதற்கு இப்போதுதான் வழக்காம்.அவன் கடத்தவில்லை;கொடுத்தான்.

ஆனால் இந்திய நாடு தமிழனின் உயிரை அல்லவா எடுக்க ஆயுதம் கொடுத்தது. அடிபட்டு காயம்பட்ட தம்பிகள் என்னைதொடர்பு கொண்டு கை,கால்கள் இழ்ந்துவிட்டோம். மருந்துகள் இல்லாமல் அழுக்கொண்டிருக்கிறோம்.

முடிந்தால் மருந்துகள் வாங்கி அனுப்புங்கள்;இல்லையென்றால் கடித்து சாகிறோம் என்று சொன்னார்கள். அது என்னால் அந்த சமயத்தில் முடியவில்ல. என் தம்பி முத்துக்குமார் செய்திருக்கிறார்.

மருந்து கிடைக்காத பல தம்பிகள் சயனைடு கடித்து செத்து மாண்டார்கள். அரிசியும் மருந்தும் வாங்க வந்த எனது ஈழத்து பிள்ளைகளை பிடித்தனர். அவர்களிடம் பிடிங்கிய பணம் எங்கே?

2016ம் ஆண்டுதான் நமது இழக்காக இருந்தது. ஆனால் இப்போதும் கொடுக்கப்படும் நெருக்கடி. அதற்கு முன்பே நுழையவாய்ப்பு கொடுக்கிறது.

அண்ணன் பிரபாகரன் கேட்ட கேள்வி என்ன தெரியுமா? தமிழகத்தில் ஒரே ஒரு வீரன் இருந்தான் வீரப்பன் என்று. அவனையும் கொன்றுவிட்டீர்களே நியாயமா என்று கேட்டார்.

வீரப்பனை விசம் வைத்து கொன்று அதன்பிறகு சுட்டுக்கொன்றதாக மெடல் வாங்கிய போலீஸ் தமிழ்நாடு போலீஸ்.தமிழனுடை பண்பாட்டு மரபுகளை வீரப்பன் மதித்திருந்தான். மது,மாது,சூது,புகை என்று அவன் எதையும் நாடியதில்லை. அப்படி இருந்ததால்தான் நாகப்பாவை கடத்தியவன் நடிகையை கடத்தவில்லை.

ஒரு தமிழன் எந்த ஒரு சிங்களப்பெண்ணின் தாவணியை தொட்டதுண்டா. ஆனால் அவன் இறந்த ஒரு தமிழச்சியைவன்புணர்ச்சி செய்தானே யாராவது கேட்டதுண்டா?’’என்று ஆவேசமாக பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக