24 ஏப்ரல் 2010

ஐ.தே.கட்சியின் தலைமைப் பொறுப்பில் ரணில் இருக்கும்வரை,தொடர்பு இல்லை.மனோ கணேசன்.


ஐக்கிய தேசிய முன்னணியில் ரணில் விக்கிரமசிங்க தலைமைப் பொறுப்பில் இருக்கும் வரை தாம் ஐக்கிய தேசிய முன்னணியுடன் எது வித தொடர்புகளையும் ஏற்படுத்திக் கொள்ளப் போவதில்லை என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் எமது இணையத் தளத்துக்குத் தெரிவித்தார். ஐக்கிய தேசிய முன்னணியில் இருந்து தாம் முற்றாக விலகியுள்ளதுடன், இனி வரும் காலங்களில் தொடர்ந்து தனித்து செயற்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இன்று மலை 5.00 மணிக்கு கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடைபெற இருக்கும் மத்திய குழு கூட்டத்தின் போது, இவ்விடயம் தொடர்பாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.ஜனநாயக மக்கள் முன்னணியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து, மனோ கணேசனிடம் கேட்ட போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

செய்தி:வீரகேசரி இணையம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக