21 ஏப்ரல் 2010

சுன்னாகத்தில் இளம்பெண் கடத்தப்பட்டு பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்!

கடந்த திங்கட்கிழமை இரவு யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் இளம் பெண் ஒருவரை இரு இளைஞர்கள் கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளதாகத் தெரியவருகிறது.
வவுனியா இடைத்தங்கல் முகாமில் தங்கியிருந்த அப்பெண் தனது உறவினரை பார்ப்பதற்காக யாழ்ப்பாணம் சென்றபோதே இவ்வாறு கடத்தப்பட்டு திங்கட்கிழமை இரவு பாலியல்ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும், மறுநாள் செவ்வாய் காலை ஒருவாறு அங்கிருந்து தப்பி வந்து அயலவர்களிடம் முறையிட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
குறித்த இளம்பெண்ணிடம் இருந்து பறித்த கைத்தொலைபேசியை வைத்திருந்த நபர் மூலம் அவரை இனம் கண்டு இருவரையும் மடக்கி பிடித்த அயலவர்கள் இவ் இரு இளைஞருக்கும் நையப்புடைத்து தகுந்த பாடம் படிப்பித்து பொலிஸாரிடம் ஒப்படைத்ததாகவும், அவர்கள் தற்போது பொலிஸாரின் கண்காணிப்பில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அறியமுடிகிறது.
24 அகவையுடைய இப்பெண் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து குடும்பத்தினருடன் வவுனியா தடுப்பு முகாமில் தங்கியிருந்தவர் என்பதுவும் தற்போது யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவருகிறது.
செய்தி:தமிழ்வின்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக