20 ஏப்ரல் 2010

இத்தாலியில் தமிழ் பெண் கொலை!உறவுகள் தொடர்பு கொள்ளவும்!


சமீபத்தில் (17.04.2010) அன்று இத்தாலியில் கொலைசெய்யப்பட்ட தமிழ் பெண்ணின் உடலை இதுவரை எவரும் பொறுப்பேற்க்க வரவில்லை. அதனை இத்தாலிய அரசாங்கம் இன்னும் சில நாட்களில் அடக்கம் செய்ய நேரிடலாம். கொலைசெய்யப்பட்ட பெண்ணின் உறவினர்களுக்கு இவ் விடையம் தெரியாது. இவருக்கு நன்பர்கள், உறவினர்கள் அல்லது தெரிந்தவர்கள் யாராவது இருப்பின் இவ் விடையத்தை அவர் பெற்றோருக்கோ அல்லது கிட்டிய சொந்தங்களுக்கோ தெரியப்படுத்தி அந்தப் பூத உடலை கையேற்க்க முடியுமா என இத்தாலிய தமிழ் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. பூத உடலை அடக்கம் செய்த பின்னர், இச் செய்தி தெரியவரும்போது அவர் உறவினர்கள் மிகுந்த மனக்கவலை அடைவார்கள் ! எனவே உங்களுக்கு இப் பெண் குறித்து ஏதாவது தெரிந்திருந்தால் உடனே கிளிநொச்சிக்கு தொடர்புகொள்ளவும். அல்லது கீள் கானும் எண்ணில் தொடர்புகொள்ளவும் என அதிர்வு இணையம் எமது வாசகர்களை வேண்டி நிற்கிறது. அவர் குறித்த விபரங்கள் பின் வருமாறு :புலத்தில் 17/04/2010இல் இடம்பெற்ற மரணம் (கொலை) தொடர்பான முக்கிய அறிவித்தல்இத்தாலி தேசத்தில், பிஸ்தோயா (Lamporecchio(Pistoia)- Italy.) என்னும் இடத்தில் வாழ்ந்த “இராமன் விஜயலக்ஸ்மி” என்னும் 36 வயதுடைய கிளிநோச்சியை பிறப்பிடமாகக் கொண்ட பெண் 17/04/2010 வெள்ளிக்கிழமை கொலை செய்யப்பட்டு மரணமடைந்துள்ளார் என இத்தாலிய காவல் மற்றும் இத்தாலியில் உள்ள இலங்கைத் தூதராலயத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இப்பெண்தொடர்பான மேலதிக காரியங்களை மேற்கொள்வதற்கு அதாவது, மரணவீட்டுக் காரியங்களை நடாத்துவதற்கு உரித்துடையவர்கள், அல்லது, இப்பெண்ணுடைய உறவினர்களின் தகவல் தெரிந்தவர்கள் அவர்களுக்கு இச்செய்தியினை அறிவித்து எம்முடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள். அல்லது, நேரடியாக இத்தாலியில் உள்ள இலங்கைத்தூதராலயத்துடன் அணுகுமாறு அறிவுறுத்தப்படுகின்றீர்கள். இத்தாலியில் உள்ள இலங்கைத்தூதராலயத்தின் வேண்டுகோளுக்கிணங்கUNGA “ஒருங்கிணைந்த புதிய தலைமுறை ஒன்றியம்” இத்தாலிய பணிமனைமக்கள் சேவைப்பிரிவுஇத்தாலி -TP+39 3346708523 / +39 3204031624 begin_of_the_skype_highlighting +39 3204031624 end_of_the_skype_highlighting (Mrs.Shana)Mail - arugan@hotmail.it(இதனை அனைத்து இணையங்களும் பாரபட்சமின்றி வெளியிட்டு உறவினர்களை தொடர்பு கொள்ள ஆவண செய்யவும். மற்றைய இணையங்களுக்கும் தயவு செய்து தெரியப்படுத்தவும். )அருகன்திரு. பிரான்சிஸ் மக்ஸிமின் தமிழ் எழுத்தாளரும், இத்தாலியில் குடிவரவு அலுவலகத்தின் அதிகாரியும். தொலைபேசி- +39 3204031624 begin_of_the_skype_highlighting +39 3204031624 end_of_the_skype_highlightingஸ்கைப்- arugan2008இணையம்- http://arugan.spaces.live.com/மின்னஞ்சல் - arugan@hotmail.comயூருப்- arugan2009 Send To Friend


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக