19 ஏப்ரல் 2010

ஐயோ பாவம்!தமிழ் நாட்டில் என்ன நடக்கிறது?தெரியாமல் ஒரு முதல்வர்.

கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவ சிகிச்சைக்காக தேசிய தலைவர் தயார் பார்வதி அம்மாள் சென்னை சென்றபோது விமான நிலையத்தில் அவரை விமானத்தில் இருந்து இறங்கவிடாது, அப்படியே திருப்பி அனுப்பியது தமிழ் நாடு அரசு. இன்று தமிழ் நாடு சட்டமன்றம் கூடியபோது இது குறித்து விவாதிக்க விசேட பிரேரணை ஒன்றை எதிர்க்கட்சிகள் கொண்டுவர முற்பட்டன. அதற்கு பதிலளித்த கருணாநிதி இது குறித்து தாம் எதுவும் அறிந்திருக்க வில்லை எனவும், அடுத்த நாள் காலை பேப்பரில் தான் தான் இச் செய்தியை படித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவரின் இவ்வறிக்கையைத் தொடர்ந்து சட்டமன்றில் பெரும் அமளி ஏற்பட்டது. வேடிக்கையும் வெட்கப்படவேண்டிய விடையம் என்னவென்றால், இவருக்கு விமானநிலையத்தில் நடந்தது எதுவும் தெரியாதாம்.சம்பவ தினமன்று கலகமடக்கும் பொலிசார், சென்னை விமான நிலையத்தில் குவிக்கப்படனர். மதிமுக செயலாளர் வைகோ தாக்கப்பட்டார், சன் தொலைக்காட்சி உட்பட பல தொலைக்காட்சிகள் இதனைச் செய்தியாக வெளியிட்டன, இருப்பினும் இச் செய்தி முதல்வர் காதுகளுக்கு எட்டவில்லை என்பது, பூனை கண்ணை மூடினால் பூலோகம் இருண்டுவிடும் என்று கூறுவதுபோல உள்ளது. மிகவும் சிறு பிள்ளைத்தனமாக தனக்கு எதுவும் தெரியாது என்று இவர் கூறியிருக்கும் கருத்துகள் அப்பட்டமான பொய்.தமிழ் நாட்டில், ஸ்ராலின் ஆகட்டும் அல்லது அழகிரியாகட்டும் இவர்கள் இருவருக்கும் தெரியாமல் எதுவும் நடந்துவிடப் போவது இல்லை. இச் சம்பவம் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் உடனே கலைஞரை அல்லது அவரது குடும்பத்தை நிச்சயம் தொடர்புகொண்டிருப்பார்கள். சோணியா அம்மையாரை திருப்திப் படுத்த கலைஞர் ஆடிய நாடகமே இது. எத்தனையே வரலாற்றுப் பிழைகளை இழைத்துள்ள கலைஞர் இறுதிக்கட்டத்திலாவது மனம் மாறுவார் என்று பல தமிழர்கள் காத்திருந்திருக்கக் கூடும். ஆனால் அவர் போக்கு என்ன என்பதை தற்போது தமிழர்களுக்கு அவர் செய்கை நன்கு புரியவைத்துள்ளது.
(செய்தி:அதிர்வு.கொம்,தலைப்பு மாற்றப்பட்டுள்ளது)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக