15 ஏப்ரல் 2010

பேர்லினில் மாபெரும் பேரணி.

எல்லாம்  முடிந்துவிட்டதென்று ஒப்பாரி வைத்துக்கொண்டிருப்பதற்கான தருணம் அல்ல இது.இடிகளைத் தலைமீது தாங்குவது ஈழத்தமிழினத்திற்கு இது ஒன்றும் முதன்முறையும் அல்ல.யாருடைய மக்கள் நாம்!அன்பான உறவுகளே!எங்கள் மக்களின் கண்களில் கண்ணீர் இருக்கும்வரை அதைத்துடைப்பதற்கான நமது கடமைக்கும் ஓய்வு கிடையாது.சிங்களப்பேரினவாதத்தின் ஜனநாயகத்திற்கு எதிரான தமிழ் விரோதப்போக்கை இப்போதுதான் மேலைநாடுகள் நேருக்கு நேரே அறியத்தொடங்கியுள்ளன.தனது சிங்களமக்களுக்கான அரசாக விளங்கக்கூடிய தகுதியே இல்லாத சிறிலங்காவின் அதிகாரபீடம்,எப்படி தமிழ்மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்து ஜனநாயகத்தை பேணிக்கொள்ளப்போகின்றது என்ற சந்தேகம் முன்னணி நாடுகளிடம் வலுக்கத்தொடங்கியுள்ளது.போர்க்காலங்களில் சிறிலங்கா மேற்கொண்ட மனித உரிமை மீறல்களுக்கான சாட்சியங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.பயங்கரவாதத்திற்கு எதிரானபோர் என்ற முலாம் பூசப்பட்டு மிகக் கவனமாக சர்வதேச நாடுகளிடம் சிறிலங்கா மேற்கொண்டிருந்த பொய்ப்பரப்புரையின் முகத்திரை இப்போது கிழிந்து கொண்டுவருகிறது.இது வெற்றியின் பின்னரான பலவீனம்.மமதையின் உச்சியில் நின்றுகொண்டு நீயும் பயங்கரவாதிதான் என ஐரோப்பிய நாடுகளை சிறிலங்காவின் அதிகாரவர்க்கத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.உண்மையை உலகம் உணரத்தொடங்கிவிட்டது.
நமது மக்கள் தத்தம் வாழ்விடங்களில் வாழக்கூடிய இயல்பான நிலைமை உடனடியாக தோற்றுவிக்கப்பட வேண்டும்!
தடுப்பு முகாம்களில் எந்தவொரு விசாரணையுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் முழுமையான மேற்பார்வையின் கீழ் கொண்டுவரப்பட்டு,தத்தம் குடும்பங்களுடன் வாழ அனுமதிக்கப்பட வேண்டும்!
சிங்கள ஆட்சியாளர்களால் தமிழ்மக்கள் மீது கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் ஐ.நா.பொதுமன்றில் விசாரிக்கப்படவேண்டும்!
இலங்கைத்தீவிலே தமிழ் மக்களின் இன உரிமைகள் மதிக்கப்பட்டு,கெளரவமான வாழ்க்கையினை வாழ்வதற்கு ஏதுவாக தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு அமைவான தீர்வு எட்டப்படவேண்டும்!
ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து ஜெர்மனியத் தலைநகர் பெர்லினில் மாபெரும் பேரணி!
படுகொலை செய்யப்பட்ட எம் ஆயிரமாயிரம் மக்களையும்,அவர்களை காப்பதற்காய் தம் இன்னுயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களின் கடைசிக் கணங்களையும் தீயாய் நெஞ்சங்களில் சுமந்து வீறுகொண்டு எழுவோம்!
இடம்:Klingelhöfer str ,1
10785 Berlin (Norway botschaft )
காலம்:20 .04 .2010
காலை 10 :30 இருந்து 15 :௦௦ மணிவரை.
அறிக்கை:சம உரிமைகளுக்கான தமிழர் மையம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக