20 ஏப்ரல் 2010

நாம் தமிழர் இயக்கத்தினருக்கான அறிவிப்பு!

நாம் தமிழர் இயக்கத்தவர்க்கு இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் கூத்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது
உலகமெங்கும் பரவியுள்ள நாம் தமிழர் இயக்கத்தவர்கள் மே 18 அன்று மதுரையில் நடைபெறும் தமிழின எழுச்சி அரசியல் மாநாட்டையொட்டி கருத்தரங்குகள்,கலந்தாய்வுகள்,தெருமுனைப்பிரச்சாரங்கள் போன்றவற்றையும் பல்வேறு பொதுப்பிரச்சனைகளில் ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றையும் நடத்தி வருகின்றனர்.இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் புகைப்படங்களுடன் உடனடியாக அனுப்பி வைக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.மேலும் இது போக அனைத்து இடங்களிலும் பல்வேறு முறைகளில் செய்யப்படும் விளம்பரங்கள் போன்றவற்றையும் உடனடியாக அனுப்பி வைக்கவும்.இது அனைத்தையும் இணையத்தில் வெளியிடுவதன் மூலம் நமது இயக்க பணிகளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அறிந்து கொள்வதற்கு வசதியாகவும் அனைவரும் உத்வெகத்துடன் செயல்படுவதற்கு உதவியாகவும் இருக்கும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மின்னஞ்சல் முகவரி.naamtamizhar@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக