18 ஏப்ரல் 2010

புலிகள் தாக்கலாம்!வாக்கு எண்ணும் நிலையம் மாற்றம்.

திருகோணமலை மாவட்டம் கும்புருபிட்டிய தேர்தல் தொகுதியில் நடந்த வன்முறைகள் காரணமாக அங்கு நாளை மறுதினம் மறுவாக்கெடுப்பு நடக்கவுள்ளது. அந்த வாக்குகளை அன்று மாலையே அதே கும்புருப்பிட்டிய வாக்குச் சாவடியில் வைத்துக் கணக்கெடுத்து முடிவு வெளியிடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது போலீசின் அறிவுறுத்தலின் பிரகாரம் மேற்படி வாக்கெண்ணும் நிலையமானது திருகோணமலை பிரதேச செயலகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.கும்புறுப்பிட்டி பகுதியில் இப்போதும் எஞ்சியுள்ள விடுதலைப் புலிகளால் வாக்கெண்ணும் பணிக்கு இடைஞ்சல்கள் ஏற்படலாம் என்ற காரணத்தாலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக