12 அக்டோபர் 2013

பதவிப்பிரமாண நிகழ்வில் கலந்து கொள்ளாமை விபத்தினால் இல்லை!

அரசியல் ரீதியான முரண்பாடுகளே பதவிப்பிரமாண நிகழ்வில் பங்கேற்காமைக்கு காரணம் -பதவிப்பிரமாண நிகழ்வில் தான் பங்கேற்காமைக்கு அரசியல் ரீதியாக பல காரணங்கள் உள்ளன என்று தமிழீழ விடுதலை இயக்கம் TELO சார்பாக மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்டு வடமாகாண சபைக்கு தெரிவாகியுள்ள வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிடுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'யாழ்ப்பாணத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம் பெற்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்வில் நான் கலந்து கொள்ளாமைக்காண காரணம் எனது மனைவி விபத்தில் சிக்கியதே என வெளியான செய்திகளில் எவ்விதமான உண்மைகளும் இல்லை.எனது மனைவி அவ்வாறான விபத்தில் மாட்டிக்கொள்ளவும் இல்லை. சில ஊடகங்கள் தாம் சார்ந்த அரசியல் நலன்களுக்காக நடக்காத ஒன்றை திருவுபடுத்தி நடந்ததாக செய்திகளை வெளியிட்டு இருந்தமை வருந்தத் தக்கது.'
"நான் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ளாமைக்கு அரசியல் ரீதியாக பல காரணங்கள் உள்ளது. அதனை வெகு விரையில் வெளியிடுவேன்' என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக