02 அக்டோபர் 2013

இளைஞனை கோடரியால் தாக்கிய கொலை வெறியர்கள்!

கிளிநொச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளரான இளைஞன் மீது அடையாளம் தெரியாதோர் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் படுகாயம் அடைந்த நிலையில் ஒரு நாளின் பின்னர் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவதுதமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு ஆதரவாக கடந்த வடக்கு மாகாண சபைத் தேர்தல் பரப்புரை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கிளிநொச்சி ஊற்றுப்புலத்தினைச் சேர்ந்த ஸ்ரீராம் விஜிதன் என்பவர் கடந்த 29ஆம் திகதி இரவு வீடு நோக்கிச் சென்ற போது இடை மறித்த அடையாளம் தெரியாதோர் கோடரியால் தலையில் கொத்தி அவரைப் படுகொலை செய்ய முற்பட்டிருக்கின்றனர்.
அவர் கையால் தடுக்க முற்பட்டவேளை கை உடைந்ததுடன் தலையிலும் படுகாயம் அடைந்திருக்கின்றார். சம்பவத்தினை அடுத்து அவர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்திய தாக்குதலாளிகள் அவர் உயிரிழந்துவிட்டதாக கருதி அங்கிருந்து அகன்று சென்றிருக்கின்றனர். இருப்பினும் மறு நாள் வரையில் மயக்கமடைந்த நிலையில் அதே இடத்தில் காணப்பட்ட அவர் மயக்கம் தெளிந்து எழுந்துள்ளார் இன்னிலையில் பிரதேச மக்களின் உதவியுடன் மீட்கப்பட்டு கிளிநொச்சி மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டமைப்பிற்கு ஆதரவாக செயற்பட்ட இளைஞர்களை இலக்குவைத்து சிறீலங்காப்படையின் புலனாய்வாளர்கள் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக