20 அக்டோபர் 2013

விக்னேஸ்வரனுக்கு கெகலிய எச்சரிக்கை!

வடமாகாண சபையின் முதலமைச்சராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சீ.வி.விக்னேஸ்வரன் பதவிப் பிரமாணம் செய்த போதும், அவர் யாப்புக்கு எதிராகச் செயற்பட்டால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார் கேகலிய ரம்புக்வெல. சில நாட்களாக ரம்புக்வெலவும், சிவியும் சொற்போரில் ஈடுபட்டுவருகின்றார்கள். அதில் ஒருபகுதியாகவே கேகலிய மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரம்புக்வெல தனது எச்சரிக்கையில் கூறியதாவது; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் ஜனாதிபதியின் முன் பதவிப் பிரமாணம் செய்துகொண்டது நற்செய்தி ஆனால் அரச வேலைத் திட்டங்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையில் அவர்கள் செயற்பட்டால், ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்தவர் என்றும் பாராமல் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிவரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக